அரியாசனம்
————–
அரியாசனம் கொள்ளவேண்டும் பெருமை தன்
மேல் அமரும் தலைவன் முகம் பார்த்து !
தலைவன் அவனும் சிந்திக்கவேண்டும் இந்த
அரியாசனத்துக்கு தானும் பெருமை
சேர்க்க வேண்டும் தன் நன்னடத்தையால் என்று !
தலைவனுக்கு அரியாசனம் தரும் பொது சனம்
ஏதும் அறியா சனம் அல்ல ! ஒரு ஜடமும் அல்ல !
அரியாசனம் ஒரு தலைவனுக்கே நிரந்தரமும் இல்லை !
புரிய வேண்டும் ஒரு உண்மை தலைவனுக்கு ..
அவனை அரியாசனத்தில் அமர்த்துவதும் பொது ஜனம்
அரியாசனம் அவனுக்கு சரியாசனம் இல்லை என்றால்
சரியான தருணத்தில் தலைவன் அவனை கீழே
இறக்கி விரட்டி அடிப்பதும் அதே பொது ஜனம்தான் என்று !
இதை மறக்காமல் இருந்தால் சிறக்கும் ஒரு தலைவனின்
நல்லாட்சி !
K.Natarajan in http://www.dinamani.com
Natarajan
Advertisements