வாரம் ஒரு கவிதை…. ” குழந்தையின் குரல் “

 

குழந்தையின் குரல்
——————–
மழலையின் குரல் ஒரு அன்னைக்கு
அழைப்பு மணி என்றால் அந்த
அன்னையின் பதில் குரல் தந்திடும்
ஒரு புத்துணர்ச்சி அந்த குழந்தைக்கு !
இது ஒரு பாசப்பிணைப்பு !
குரல் ஒலி வழியில்  குழந்தையும்
தாயும் இணையும் இந்த பாச  சங்கமம்
ஐந்தறிவு ஜீவனுக்கும் சொந்தமே !
இறைவன் படைப்பில் இது ஒரு
அதிசயம் …ஆச்சர்யம் !
தொடு திரை கணினி அலை பேசி
நம் கையில் குழந்தை போல இன்று !
“தாய்” நம் குரலை இனம் கண்டு
தன் கதவு திறந்து இந்த உலகையே
நம் கண் முன் கொண்டு வந்து சேர்க்குதே
இந்த அலைபேசி “குழந்தை” !
இந்த  கணினி அலைபேசி நமக்கு
குழந்தையா ….இல்லை  நாம்
அதற்கு குழந்தையா !  இது இன்று
புரியாத  புதிர் !
தன் குழந்தையின் குரல் மறந்தாலும்
தங்கள்  அலை பேசியின் அழைப்பு
மணியின் ஒலியை சற்றும் மறக்காத
தாய் தந்தை பலர் நம்மிடையே  உண்டு இன்று !
இது விந்தையிலும் விந்தை !
K. Natarajan  in http://www.dinamani.com dated 21st May 2017

Leave a comment