யுத்தம் செய்யும் கண்கள்
————————
அக்கம் பக்கம் யாருமில்லை …
யாரும் என்னைப் பார்க்கவில்லை
நான் செய்யும் தவறுக்கு சாட்சி
என்னைத் தவிர யாரும் இல்லை
என்னும் இறுமாப்பு அந்த கயவனுக்கு !
அவனுக்கு தெரியாது அவன் கண்கள்
தவிர ஒரு மூன்றாம் கண் அவனை
கண்காணிக்கிறது என்று !
சத்தம் இல்லாமல் மூன்றாம் கண்
செய்யும் இந்த யுத்தம் நிச்சயம்
நிறுத்தும் அந்த கயவனை சட்டத்தின் முன்னால்
ஒரு நாள் !
Natarajan