யாரோவாகிப் போன அவள் …
============================
நேற்று வரை அவளுக்கு ராஜ உபசாரம்
சற்றும் குறைவில்லா கவனிப்பு …அவள்
மேல் அப்படி ஒரு அக்கறை ! ஒரு கருவை
சுமக்கும் தாய் அல்லவா அவள் !
பெற்றெடுத்தாள் ஒரு குழந்தையை அவள்
இன்று ! மாறி மாறி குழந்தையை தூக்கி
கொஞ்சுது உறவினர் கூட்டம் !
மறந்தும் கூட பிறந்த குழந்தை அவள்
கையில் இல்லை ! நேற்று வரை அவள்தான்
எல்லாமே ! ஆனால் இன்று யாரோவாகிப்போன
அவளை கவனிப்பார் யாரும் இல்லை !
யாரோவாகிப்போன அவளுக்கு அதில் வருத்தமில்லை !
வாடகைத் தாய் அவளுக்குத் தெரியாதா
என்ன …அவள் எல்லை எது வரை என்று ?
K.Natarajan
17/02/2019
நன்று