வாரம் ஒரு கவிதை …” வருவாயா நீ ” பானி ” ?

 

வருவாயா  நீ …” பானி ” ?
===========================
பேய்  மழை  வேண்டாம் எங்களுக்கு
பணி முடக்கிடும் புயல் காற்றும்
வேண்டாம்  எங்களுக்கு !   நீ
வருவாய் , ஒரு மழை தருவாய் என்று
காத்திருக்கோம் “பானி “!
நீ வருவாயா ? எங்கள் மண்ணும்
மனமும் குளிர ஒரு பெரு மழை தருவாயா நீ ?
ஆடி அசைந்து   நீ வரும் முன்னரே
 விருந்தாளி உன்னைப் பற்றி விமர்சனம்
ஒரு நூறு !  முகம் திரிந்து நோக்கக்
குழையும் விருந்தாக மாறி சினம் கொண்டு
நீ  தடம் மாறி செல்ல வேண்டாம்”பானி”
கண்ணில் நீருடன் காத்திருக்கோம்
உன் வரவுக்கு ..எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாக  ஏற்றுக்கொள் “பானி ” நீ !
இயற்க்கை அன்னை நீ அருள் மழை
பெரு மழை வடிவில் பொழிய வேண்டும்
இந்த மண்ணுக்கு ! எங்கள் ஆனந்தக்
கண்ணீரும்  உன் மழைப் பொழிவுடன்
சேர்ந்து நனைக்க வேண்டும் என் மண்ணை !
வருவாயா நீ “பானி” ?   கருமேக ஆடை
கட்டி  இதமான ஒரு நாட்டியம் ஆட என் மண்ணில் !
K.Natarajan
29/04/2019

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s