நெடு வாழ்வின் நினைவு
+++++++++++++++++++++++
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்தது இந்த பூமி !
சில நாள் வாழ்ந்தாலும் பல நாள் வாழ்ந்தாலும்
பதிக்க வேண்டும் நான் ஒரு நல்ல முத்திரை !
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நானும்
படைக்க வேண்டும் சரித்திரம் !
ஆயிரம் பிறை காண ஆசை எனக்கு என் நெடு
வாழ்வில் ! அந்த நெடு வாழ்வின் நினைவலைகள்
மீது விடாது தொடர வேண்டும் என் படகுப்
பயணம் …நெடு வாழ்வின் இனிய பயணம் !
என் பயணம் முடிந்தாலும் தொடர வேண்டும்
என் பிள்ளைகள் பயணம் அதே படகில்
என் நெடு வாழ்வின் நினைவலைகள் மீது !
படைக்க வேண்டும் அவரும் ஒரு சரித்திரம்
அவரவர் நெடு வாழ்வில் !
K.Natarajan
in http://www.dinamani.com dated 26/06/2019