பறவை
+++++++
கூண்டிலிருந்து வெளியே வந்த பறவை
முன்னால் மண்டியிட்டான் மனிதன்
மன்னிப்பு கேட்க! … நீ இப்போ
ஒரு சுதந்திரப் பறவை என்றான் !
நான் எப்போதுமே சுதந்திரப் பறவைதான்
எனக்கு எல்லைக் கோடு என்று எதுவும்
இல்லை விண்ணில் பறக்க !
உன்னைப் போல் எனக்கு பாஸ்போர்ட்
விசா என்று எதுவும் தேவை இல்லை
எனக்கு எந்த மண்ணிலும் தரை இறங்க !
சொன்னது பறவை !
இப்போதும் மனிதன் குனிந்தான்
மண்ணில் தன் முகம் பதித்தான்
வெட்கத்துடன் !
K.Natarajan
in http://www.dinamani.com dated 28/08/2019