யார் மனிதன் ?
++++++++++++++
மனிதன் கையில் இருக்கும் கை பேசி
தனி ஒரு பலமாக ஆட்டி வைக்கிறது
மனிதனை அவன் என்ன செய்ய வேண்டும்
ஒரு நாளில் என்று !
மனிதனுக்கு அடங்க வேண்டிய கை
பேசியும் வலை நுட்பமும் இப்போது
விரித்து விட்டது மாய வலை மனிதனுக்கு !
வலைக்குள் சிக்கிய மனிதன் முழிக்கிறான்
வெளியே வரும் வழி தெரியாமல் !
ஆறறிவு படைத்த மனிதன் நான்
மனிதன் நான் மனிதன் என்கிறான் !
ஆறறிவைப் பின்னுக்குத் தள்ளிய
வலை நுட்பம் கேட்கிறது இன்று
யார் மனிதன் யார் மனிதன் என்று !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 23/10/2019