அப்பாவின் நாற்காலி
++++++++++++++++++++++
எனக்கு அது வேண்டும் …எனக்கு இது வேண்டும்
அப்பாவின் நினைவாக ….பிள்ளைகள் கேட்கின்றார்கள்
அப்பாவின் ஆஸ்தி ஒவ் வொன்றாக …அப்பாவின்
அஸ்தி கடலில் கரைத்தவுடன் !
ஓரு பிள்ளை மட்டும் கேட்டான் அப்பாவின் நாற்காலி
மட்டும் போதும் தனக்கு என்று !
அவனுக்குத் தெரியும் அவன் அப்பாவின் கட்சிப்
பதவி நாற்காலியின் மதிப்பு என்ன என்று !
kandasami natarajan
in http://www.dinamni.com dated 11/12/2019