கேள்வி எங்கே ?
கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும்
தலைப்பு கொடுத்தால் ஒரு
கவிதை பிறக்கும் தன்னால் !
இரண்டுமே இல்லை என்றால்
வறண்டு விடும் கவிதை கிணறு !
முரண்டு பிடிக்கிறேன் என்று
நினைக்க வேண்டாம் !
பிறக்க வேண்டும் என்னுள் ஒரு
கவிதை மீண்டும் !
கேளுங்க ஒரு கேள்வி என்னை
கேட்டு மகிழுங்க என் பதிலை
ஒரு கவிதை வடிவில் !
கந்தசாமி நடராஜன்