வாரம் ஒரு கவிதை !

அடக்கி வாசி மனிதா நீ !

++++++++++++++++++++

நீ அங்கு செல்லாதே …நீ  இங்கு 
வராதே ! … சொல்லாமல் 
கொள்ளாமல் பரவும்  வைரஸால் 
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !

என் கையில் எல்லாமே அடக்கம் 
என்னை மீறி என்ன நடக்கும் 
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !

இயற்கை இன்று போட்டு விட்டது 
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை 
தன் கோபத்தை ! 

புரிந்து நடந்து கொள்  மனிதா 
உன் எல்லைக்கோடு என்ன என்று 
தெரிந்து நடந்து கொள் !

இயற்கையின் எல்லைக் கோட்டை நீ 
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக் 
கோடும் கூட மூடப்படும் உனக்கு !

இயற்கையின் சீற்றத்தின்  ஒரு சிறு 
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !

கந்தசாமி நடராஜன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s