விட்டு விடு எங்களை …
வாகனம் இல்லா சாலைகள் …மாணவர்
இல்லா கல்வி சாலைகள் !
அலுவலர் இல்லா அலுவலகங்கள்… வெறிச்சோடிய
கடற்கரை !
விமானம் இல்லாத விமான நிலையம் …ரயில்
இல்லாத ரயில் நிலையங்கள் ! வழிபாட்டு
தலங்களுக்கும் போட்டு விட்டாய் நீ ஒரு பூட்டு !
கோயிலில் இருக்கும் கடவுளும் இன்று
மருத்துவ மனையில் …மருத்துவர் உருவில் !
ஊரையே அடக்கி விட்டாய் நீ ..அடங்காமல்
ஆடிய மனிதரும் முடங்கி விட்டார் வீட்டுக்குள்ளே !
கொரானா …நீ மட்டும்தான் இன்னும் அடங்காமல்
ஆட்டம் காட்டுகிறாய் உலகுக்கு !
விட்டு விடு எங்களை … போதும் உன் ஆட்டம் !
ஓரு தட்டு தட்டி மனிதா நீ ஒரு தூசு என் முன்னால்
என்று சொல்லாமல் சொல்லி விட்டாய் !
ஓடி விடு நீ இப்போதே …வீட்டை விட்டு நாங்கள்
வெளியே வர வேண்டும் …எங்கள் உலகை
புதிய உலகை பார்க்க வேண்டும் …பறவைகளின்
குரல் கேட்கவேண்டும் பழையபடி !
இனிமேல் யாரையும் ” நீ ஒரு தூசு என் முன்னால் “
என்று சொல்ல மாட்டோம் ! விட்டு விடு எங்களை
வாழ விடு எங்கள் குலத்தை !
கந்தசாமி நடராஜன்
அருமை
நன்றி