காலத்தின் கோலம்
குற்றம் புரிந்தது பாஸ் போர்ட்
தண்டனை ரேஷன் கார்டுக்கு !
நாடு விட்டு நாடு சென்றால் மட்டுமே
பாஸ்போர்ட் தேவை என்று
இருந்தோம் நாம் அன்று !
இன்று ஒரு ஊரு விட்டு இன்னொரு
ஊர் செல்ல தேவை e பாஸ் !
இது காலத்தின் கோலம் !
இந்தியன் என்னும் தேசிய நீரோட்டத்தில்
இணைந்த மனிதர் பலர் தேசிய
நெடும் சாலையில் நிற்காமல் ஓடிக் கொண்டு
இருக்கிறார் இன்று அவரவர் ஊர் தேடி !
இது யார் தவறு ? வேற்று ஊருக்கு பிழைக்க
வந்தது அவன் குற்றமா ? எதற்கு இந்த கொடிய
தண்டனை அவனுக்கு ? மனித நேயம்
காட்ட வேண்டும் நல்ல வழி அவனுக்கு !
ஊரடங்கு காரணம் காட்டி எல்லோரும்
ஒதுங்கி நின்றால் எப்படி அய்யா அடங்கும்
அவன் வேதனை ?
அந்த கிராமத்து ஏழையின் கண்ணீர்
தகர்த்து விடும் பல நகரத்துக் கோட்டைகளை !
கந்தசாமி நடராஜன்