ஒரு விண்ணப்பம் ….இறைவனுக்கு…
ஊரடங்கு ஊரடங்கு… அடங்கி இருக்கு
மனித குலம் அவரவர் வீட்டுக்குள்
நாட்டுக்குள் !
ஆனால் அடங்க மறுக்கிறதே அந்த ஒரு
விஷக் கிருமி !
மருத்துவ மனையில் இடமில்லை
மயானத்திலும் இடப் பற்றாக்குறை !
நெரு நெல் உளனொருவன் இன்றில்லை
என்னும் சொல்லுக்கு அதிரடி விளக்கம்
கொடுக்குதே ஒரு விஷக் கிருமி !
இந்த உலகமே அலறுதே !
இறைவா உன்னிடம் ஒரு விண்ணப்பம்
இவ்வளவு பேர் மேலே திடீர் என்று
வந்தால் உன் உலகிலும் இடப்
பற்றாக்குறை வராதா ?
பூவுலகில் இத்தனை பேரை ஒரு
அடையாளம் தெரியாத கிருமிக்கு
இரையாக்க வேண்டுமா நீ ?
உனக்கும் ஒரு லாபம் இல்லை
அதனால் … வழி ஒன்று சொல்கிறேன்
நான் உனக்கு …பேசாமல் அந்த கிருமியை
நீ ஒரு நொடியில் அழித்து ஒழித்து விடு !
இந்த பூமியில் எல்லோருக்கும் நிம்மதி !
உனக்கும் நிம்மதி … கணக்கில்லாமல்
வரும் பூலோக மக்களை எங்கு தங்க
வைப்பது என்னும் பிரச்சனை உனக்கும்
தீரும் !
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
சொல்வதை சொல்லிவிட்டேன்
நல்ல முடிவு எடுக்க வேண்டும் நீ
இறைவா !!!
எங்கள் வாழ்வு உன் கையில்தானே
எப்போதும் இறைவா !
கந்தசாமி நடராஜன்