வாரம் ஒரு கவிதை

ஒரு விண்ணப்பம் ….இறைவனுக்கு…


ஊரடங்கு ஊரடங்கு… அடங்கி இருக்கு 
மனித குலம் அவரவர் வீட்டுக்குள் 
நாட்டுக்குள் !

ஆனால் அடங்க மறுக்கிறதே அந்த ஒரு 
விஷக் கிருமி !

மருத்துவ மனையில் இடமில்லை 
மயானத்திலும் இடப் பற்றாக்குறை !

நெரு நெல் உளனொருவன்  இன்றில்லை 
என்னும் சொல்லுக்கு அதிரடி   விளக்கம் 
கொடுக்குதே ஒரு  விஷக் கிருமி !

இந்த உலகமே அலறுதே !
இறைவா உன்னிடம் ஒரு விண்ணப்பம் 
இவ்வளவு பேர் மேலே திடீர் என்று 
வந்தால் உன் உலகிலும் இடப் 
பற்றாக்குறை வராதா ?

பூவுலகில் இத்தனை பேரை ஒரு 
அடையாளம் தெரியாத கிருமிக்கு 
இரையாக்க வேண்டுமா நீ ?

உனக்கும் ஒரு லாபம் இல்லை 
அதனால் … வழி ஒன்று சொல்கிறேன் 
நான் உனக்கு …பேசாமல் அந்த கிருமியை 
நீ ஒரு நொடியில் அழித்து ஒழித்து விடு !
இந்த பூமியில் எல்லோருக்கும் நிம்மதி !
உனக்கும் நிம்மதி … கணக்கில்லாமல் 
வரும் பூலோக மக்களை எங்கு தங்க 
வைப்பது என்னும் பிரச்சனை உனக்கும் 
தீரும் ! 
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !
சொல்வதை சொல்லிவிட்டேன் 
நல்ல முடிவு எடுக்க வேண்டும் நீ 
இறைவா !!!
எங்கள் வாழ்வு உன் கையில்தானே 
எப்போதும் இறைவா !

கந்தசாமி நடராஜன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s