சஷ்டி கவசம் என்னைக் காக்கும் கவசம்
முருகா ! இஷ்ட தெய்வம் நீ என்னை
கஷ்டங்களில் இருந்து காக்கும் தெய்வம்
அய்யா !
எனக்கு ஒரு கஷ்டம் அய்யா இன்று !
இஷ்டம் போல ஒரு கூட்டம் உன்
கவசமதை விவஸ்தை இல்லாமல்
அலசும் அவலம் பார்த்து மனசு
நொறுங்கிக் கிடக்கிறேன் நான் !
எத்தனை நாள் நான் பொறுப்பது இதை
முருகா? விவஸ்தை இல்லா ஒரு
அசுரர் கூட்டம் பாய்ச்சுகிறது என் காதில் நாராசம் !
அந்த சூரனையே சம்ஹாரம் செய்த நீ
இந்த அசுரர் கூட்டத்தை சம்ஹாரம் செய்ய
ஏன் இன்னும் தாமதம் ?
இன்னும் ஏன் மௌனம் காக்கிறாய் முருகா ?
உன் கவசம் படிக்காதவரும் இனி
படிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நீ விளையாடும்
திருவிளையாட்டா இது …? அதையாவது
எனக்கு மட்டும் சொல்லி விடு முருகா !
சொல்லு முருகா ! நீ மௌனம்
காப்பது எதனால் என்று எனக்கு !
சொல்லி என் மனக் கஷ்டத்தை நீக்கி
விடு முருகா !
தினமும் உன் கவசம் படிக்கும் என்னை
வந்து வணங்க வேண்டாம் மாற்றலர் எல்லாம் !
என் அப்பனைத் தூற்றும் மாற்றலரும்
உன் அருளால் உன் தாள் பணிந்து
உன்னை வணங்க வேண்டும் ஒரு நாள் முருகா !
நான் சொல்வதை சொல்லி விட்டேன்
முருகா … இனி என் அப்பன்
உன் சித்தம் !
கந்தசாமி நடராஜன்
அருமையான பக்தி மணம் கமழும் கவிதை. பாராட்டுக்கள் சார்!
ஏ வி ராமநாதன்
Thanks a lot…Mr Ramanathan .
🙏🏻 Reflects the views of thousands of people. Thank you
Thank you
Devotees feeling are echoed in this kavithai. Lord Muruga is listening and your prayer will be answered.
Thank you