வாரம் ஒரு கவிதை

சும்மா இருப்பது சுகமா ?


சும்மா இருப்பது சுகமா ? இல்லை 
சுமையா ? 
கேள்வியைக் கேளுங்கள் ஒரு தினக் கூலி 
தொழிலாளியிடம் !
ஒரு சிறு கடை வியாபாரியிடம் !
கேளுங்க ஒரு உணவக உரிமையாளரிடம் !
ஒரு பெரிய தொழில் அதிபரிடம் !
இல்லை …ஒரு விவசாய பெருமகனிடம் !
சும்மா இருந்தால் சோறு எங்கிருந்து 
கிடைக்கும் என்னும் பதில்தான் வரும் !
சும்மாதான் இருக்கிறேன் நானும் 
வீட்டுக்குள் மாதக்கணக்கில் !
நீ சும்மா கிட என்று சொல்லி விட்டதால் !
சும்மா சொல்லக் கூடாது … சும்மா இருப்பது 
சும்மா இல்லை ! அம்மாடி … ஆளை 
விடு கோவிட் … என் வீட்டு வாசல் தாண்டி 
விடு விடு என்று ஒரு நடை நடக்க வேண்டும் 
எனக்கு …உன் அலை பற்றியே பேசிக் 
கொண்டிருந்த நான் நனைக்க வேண்டும் 
என் காலை கடல் அலையில் ! 
சும்மா சும்மா எத்தனை நாள் சுற்றிக் 
கொண்டு இருப்பாய் நீ எங்கள் காலை ?

கந்தசாமி  நடராஜன் 
01/09/2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s