இந்த கேள்விக்கு என்ன பதில் ?
கோவிலில் குடியிருக்கும் கோபுர புறாவும்
பள்ளிவாசலில் குடியிருக்கும் மாடப்புறவும்
பார்ப்பதில்லை தங்களுக்குள் ஒரு பேதம் !
மனிதனுக்கு இடையில் மட்டும் ஏன்
இந்த பேதம் ?
இறைவனின் வீட்டில் குடியிருக்கும்
புறாக்கள் மனதில் இருக்கும் இந்த
கேள்விக்கு என்ன பதில் ?
கந்தசாமி நடராஜன்
05/09/2020