வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா
வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும்
எனக்கு !
வரவேண்டும் வெளியில் நான் வீட்டுக்கு
வெளியே ! வெய்யிலோ மழையோ காலாற
தெருவில் நடக்க வேண்டும் முதலில்
முகக் கவசம் எதுவும் இல்லாமல் !
வீட்டு சிறையில் இருப்பதால் மட்டும் நான்
ஒரு அரசியல் தலைவனாக முடியுமா
என்ன !
சர்ஜிகல் மாஸ்க் போடுவதால் மட்டும்
நான் ஒரு டாக்டர் ஆக முடியுமா
என்ன !
நான் நானாகவே இருக்க வேண்டும் !
முகம் தெரியா ஒரு சிறு கிருமிக்கு
பயந்து நான் ஏன் என் முகம்
மறைக்க வேண்டும் ?
யாரோ ஒருவர் இருமினால் பயம்
தும்மினால் பயம் …இப்படி பயமே
வாழ்க்கை ஆனால் கேள்விக்குறி
ஆகாதா வாழ்க்கையே ?
நித்ய கண்டம் பூரண ஆயுசு
என்னும் பழமொழிக்கு என்ன அர்த்தம்
என்று புரியுது இப்போ இந்த வயதில் !
வைத்து விட்டேன் என் பயத்துக்கு
ஒரு முற்றுப் புள்ளி ! பயம் இனி இல்லை
எனக்கு ! முகம் தெரியா கிருமி அலறி
அடித்து ஓட வேண்டும் பயம் வென்ற
என்னைப் பார்த்து ! அடங்காமல் ஆட்டம்
போட்ட அந்த விஷக் கிருமி ஓடும்
ஓட்டம் பார்த்து நான் ரசிக்க வேண்டும் !
வழி பிறக்குமா ! நல்ல வழி பிறக்குமா !
விடை கிடைக்குமா நல்ல விடை
கிடைக்குமா என் கேள்விக்கு ?
கந்தசாமி நடராஜன்
26/10/2020