வாரம் ஒரு கவிதை

வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா

வழி பிறக்குமா நல்ல வழி பிறக்குமா 
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் 
எனக்கு !

வரவேண்டும் வெளியில் நான் வீட்டுக்கு 
வெளியே ! வெய்யிலோ மழையோ காலாற 
தெருவில் நடக்க வேண்டும் முதலில் 
முகக் கவசம் எதுவும் இல்லாமல் !

வீட்டு சிறையில் இருப்பதால் மட்டும்  நான் 
ஒரு அரசியல் தலைவனாக முடியுமா 
என்ன !
சர்ஜிகல் மாஸ்க் போடுவதால் மட்டும் 
நான் ஒரு டாக்டர் ஆக முடியுமா 
என்ன !

நான் நானாகவே இருக்க வேண்டும் !
முகம் தெரியா ஒரு சிறு கிருமிக்கு 
பயந்து நான் ஏன் என் முகம் 
மறைக்க வேண்டும் ?

யாரோ ஒருவர் இருமினால் பயம் 
தும்மினால் பயம் …இப்படி பயமே 
வாழ்க்கை ஆனால் கேள்விக்குறி 
ஆகாதா வாழ்க்கையே ?

நித்ய கண்டம் பூரண ஆயுசு 
என்னும் பழமொழிக்கு என்ன அர்த்தம் 
என்று புரியுது இப்போ இந்த வயதில் !

வைத்து விட்டேன் என் பயத்துக்கு 
ஒரு முற்றுப் புள்ளி ! பயம் இனி இல்லை 
எனக்கு ! முகம் தெரியா கிருமி அலறி 
அடித்து ஓட வேண்டும் பயம்  வென்ற 
என்னைப் பார்த்து ! அடங்காமல் ஆட்டம் 
போட்ட அந்த விஷக் கிருமி ஓடும் 
ஓட்டம் பார்த்து நான் ரசிக்க வேண்டும் !

வழி பிறக்குமா ! நல்ல வழி பிறக்குமா !
விடை கிடைக்குமா நல்ல விடை 
கிடைக்குமா என் கேள்விக்கு ? 

கந்தசாமி  நடராஜன் 
26/10/2020

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s