போட வேண்டும் ஒரு கும்பிடு !
காலை இளம் காற்று! மேகம் சூழ்ந்த
வானம் !
விறு விறு என நடை போட்டேன்
சுறு சுறுப்பும் நடை பயின்றது என் கூட !
வானம் பார்த்தேன்! கதிரவனுக்கு
ஒரு வணக்கம் சொல்லலாம் என்று
நினைத்து !
நான் பார்க்கும் சமயம் எல்லாம்
கதிரவன் மேகத்தின் மேலாடையில்
மறைத்துக் கொண்டான் தன் முகத்தை !
எனக்கு முகம் காட்ட மாட்டேன்
என்று சொல்லாமல் சொல்லுகிறானா ?
முகக் கவசம் நான் அணியவில்லை
அதுதான் காரணமோ கதிரவன்
அவன் முகம் காட்டாமல் மேகத்தில்
மறைந்ததற்கு !
எனக்கும் உனக்கும் இடைவெளி
எவ்வளவு இருந்தாலும் முகக்
கவசம் கட்டாயம் உனக்கு என்று
சொல்லுகிறானோ கதிரவன் ?
நாளை மறக்காமல் முகக் கவசம்
அணிந்து போட வேண்டும் ஒரு
கும்பிடு அந்த காலை இளம் சூரியனுக்கு !
கந்தசாமி நடராஜன்
13/11/2020
தங்களுடைய கவிதை மிக அழகானது என்னை வருட செய்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள் உங்கள் கவிதை பயணம் மேலும் தொடரட்டும்
மிக்க நன்றி