வாரம் ஒரு கவிதை

என் கவலை எனக்கு …!!!


முகத்தில் ஒரு சோகம்… கவலையின் ரேகை 
என்ன கவலை எனக்கு ?
கோவிட் 19 பயம் விடுவது எப்போது 
இல்லை தடுப்பு ஊசி எப்போது எனக்கு 
கிட்டும் என்றா ?
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் 
நான் எப்போது வெளியில் சுற்றப் 
போகிறேன் என்றா ?
வெளி ஊருக்கு எப்போது போகப்போகிறேன் என்றா ?
முகமூடி இல்லாமல் வெளிக் காற்றை எப்போது 
சுவாசிக்கப் போகிறேன் என்றா?
இல்லை இல்லை … பின் என்னதான் எனக்கு 
கவலை ?  நாட்டு எல்லையில் பதட்டம்  என்று 
பயமா ? டில்லியில் உழவர் பிரச்சனை எப்போது 
தீரும் என்றா ?
இல்லை இல்லை ! தேர்தலில் எந்த கட்சி 
ஜெயிக்கும் என்றா ? 
இல்லை இல்லை !
பின்  என்ன என் பிரச்சனை ? மண்ணில் நிற்கும் 
விமானம் எல்லாம் மீண்டும் எப்போது பறக்க 
ஆரம்பிக்கும் என்றா ! நாட்டின் பொருளாதாரம் 
மீண்டும் எப்போது நிமிரும் என்று யோசனையா ?
இல்லை இல்லை …கவலை அது இல்லை !
சொன்னால் சிரிக்க கூடாது ! 
என் கவலை எல்லாம் வாட்ஸப்  பிரச்சனைதான் !
அந்த செயலி முடங்கி விட்டால் செயல் இழந்து 
போவது நான் மட்டுமா? நீங்களும் தானே !
அதுதான் கவலை இப்போ எனக்கு ! 

 கந்தசாமி நடராஜன் 
23/01/2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s