ஊமை ஆனேன் நான் …..
நேற்று இருந்தவன் இன்று இல்லை
இதுதானே கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா
என்ன உனக்கும் மேலா என்று !
சொன்னார் கடவுள் அவரவர் அவரவர்
வேலையை செய்யும் நேரம் இது
புரியவில்லை என்றேன் !
இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும்
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம்
பிறப்பது போல் உன்னைப்போல
பல உயிர்கள் தினம் தினம்
புதிதாய் பிறக்கிறதே ..அது
புரியவில்லையா உனக்கு ?
தினம் தினம் புதிதாய் பிறப்பது நீயும்தான்
நான் இருக்கிறேன் உன்னிடம் என்று
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் !
ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !
கந்தசாமி நடராஜன்
11/07/2021