இன்று ஒரு கவிதை

ஊமை ஆனேன் நான் …..


நேற்று இருந்தவன் இன்று இல்லை 
இதுதானே  கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா 


என்ன உனக்கும் மேலா என்று !
சொன்னார் கடவுள் அவரவர் அவரவர் 
வேலையை செய்யும் நேரம் இது 


புரியவில்லை என்றேன் ! 
இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும் 
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம் 


பிறப்பது போல் உன்னைப்போல 
பல உயிர்கள் தினம் தினம் 
புதிதாய் பிறக்கிறதே ..அது 
புரியவில்லையா உனக்கு ?

தினம் தினம் புதிதாய் பிறப்பது நீயும்தான்
நான் இருக்கிறேன் உன்னிடம் என்று 
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் ! 


ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !

கந்தசாமி நடராஜன்

11/07/2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s