வாரம் ஒரு கவிதை !

இதோ ஒரு கவிதை மீண்டும் !


ஏன் இல்லை ஒரு கவிதை உன்னிடம் 
என்ன இல்லை உன்னிடம் ஒரு கவிதை 
எழுத ?
இல்லை என்று சொல்லாமல் வேண்டும் ஒரு கவிதை 
எனக்கு 
கேட்கிறது நட்பு உள்ளங்கள் பல !
இனிமேலும் இல்லை என்று சொல்வேனா நான் ?
இதோ விதைத்து விட்டேன் மீண்டும் ஒரு 
கவிதைக்கு வித்து !முத்து முத்தாகப் 
பூத்துக் குலுங்க வேண்டும் மீண்டும்  என் கவிதை 
பூந்தோட்டம் ! 
காத்திருக்கிறேன் உங்கள் நல் வாழ்த்துக்கு !

கந்தசாமி  நடராஜன் 
09/01/2022

இன்று ஒரு கவிதை

இப்போ என்ன அவசரம் எனக்கு !


கண்டவர் விண்டிலர் விண்டவர் 
கண்டிலர் 


விண்வெளி பயணம் செல்ல 
தேவை பல கோடி !


விண்வெளி விண்ணுலகு இல்லையே 
பிறகு ஏன் இத்தனை ஆரவாரம் ?


காலம் வரும் நேரம் ஒரு பைசா 
செலவு இல்லாமல் என்னை விண்ணுலகு 
கூட்டி செல்ல வருவான் காலன் !


அவன் வரும் வரை காத்திருப்பேன் 
நான் விண்ணுலகு காண ! 


இப்போ எனக்கு என்ன அவசரம் ?

கந்தசாமி நடராஜன் 
11/07/2021 

இன்று ஒரு கவிதை

ஊமை ஆனேன் நான் …..


நேற்று இருந்தவன் இன்று இல்லை 
இதுதானே  கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா 


என்ன உனக்கும் மேலா என்று !
சொன்னார் கடவுள் அவரவர் அவரவர் 
வேலையை செய்யும் நேரம் இது 


புரியவில்லை என்றேன் ! 
இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும் 
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம் 


பிறப்பது போல் உன்னைப்போல 
பல உயிர்கள் தினம் தினம் 
புதிதாய் பிறக்கிறதே ..அது 
புரியவில்லையா உனக்கு ?

தினம் தினம் புதிதாய் பிறப்பது நீயும்தான்
நான் இருக்கிறேன் உன்னிடம் என்று 
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் ! 


ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !

கந்தசாமி நடராஜன்

11/07/2021

இன்று ஒரு கவிதை

ஊமை ஆனேன் நான் ..

++++++++++++++++++++++


நேற்று இருந்தவன் இன்று இல்லை 
இதுதானே  கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா 
என்ன உனக்கும் மேலா என்று !


சொன்னார் கடவுள் அவரவர் அவரவர் 
வேலையை செய்யும் நேரம் இது 
புரியவில்லை என்றேன் ! 


இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும் 
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம் 
பிறப்பது போல் உன்னைப்போல 
பல உயிர்கள் தினம் தினம் 
புதிதாய் பிறக்கிறதே ..அது 
புரியவில்லையா உனக்கு 


நான் இருக்கிறேன் உன்னிடம் என்று 
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் ! 
ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !

கந்தசாமி நடராஜன்

01/07/2021

வாரம் ஒரு கவிதை

முதல் கையெழுத்து 


நாங்கள் பதவிக்கு வந்தால் எங்கள் 
முதல்வர் போடும் முதல் கையெழுத்து 
கோவிட்  19 ஐ தள்ளுபடி செய்வதுதான் !
வரலாம் ஒரு தேர்தல் வாக்குறுதி இப்படியும் ! 

கந்தசாமி நடராஜன் 
23/01/2021

வாரம் ஒரு கவிதை

என் கவலை எனக்கு …!!!


முகத்தில் ஒரு சோகம்… கவலையின் ரேகை 
என்ன கவலை எனக்கு ?
கோவிட் 19 பயம் விடுவது எப்போது 
இல்லை தடுப்பு ஊசி எப்போது எனக்கு 
கிட்டும் என்றா ?
வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் 
நான் எப்போது வெளியில் சுற்றப் 
போகிறேன் என்றா ?
வெளி ஊருக்கு எப்போது போகப்போகிறேன் என்றா ?
முகமூடி இல்லாமல் வெளிக் காற்றை எப்போது 
சுவாசிக்கப் போகிறேன் என்றா?
இல்லை இல்லை … பின் என்னதான் எனக்கு 
கவலை ?  நாட்டு எல்லையில் பதட்டம்  என்று 
பயமா ? டில்லியில் உழவர் பிரச்சனை எப்போது 
தீரும் என்றா ?
இல்லை இல்லை ! தேர்தலில் எந்த கட்சி 
ஜெயிக்கும் என்றா ? 
இல்லை இல்லை !
பின்  என்ன என் பிரச்சனை ? மண்ணில் நிற்கும் 
விமானம் எல்லாம் மீண்டும் எப்போது பறக்க 
ஆரம்பிக்கும் என்றா ! நாட்டின் பொருளாதாரம் 
மீண்டும் எப்போது நிமிரும் என்று யோசனையா ?
இல்லை இல்லை …கவலை அது இல்லை !
சொன்னால் சிரிக்க கூடாது ! 
என் கவலை எல்லாம் வாட்ஸப்  பிரச்சனைதான் !
அந்த செயலி முடங்கி விட்டால் செயல் இழந்து 
போவது நான் மட்டுமா? நீங்களும் தானே !
அதுதான் கவலை இப்போ எனக்கு ! 

 கந்தசாமி நடராஜன் 
23/01/2021

வாரம் ஒரு கவிதை

அடையாளம் காட்டுமா இந்த அட்டை ?

எத்தனை எத்தனை அடையாள அட்டை 
நீயும் நானும் இந்த மண்ணில் பிறந்து 
வாழ்கிறோம் என்னும் உண்மையை 
உறுதி செய்ய ! 

எங்கு சென்றாலும் யார் கேட்டாலும் 
காண்பிக்க வேண்டும் ஒரு அட்டை !
நம் அம்மா அப்பா தவிர எல்லோரும் 
கேட்கிறார் நம்முடைய  அடையாளம் 
என்ன என்று !

ஒரு மனிதனை அடையாளம் காட்டும் 
சிறு அட்டை அடையாளம் காட்டுமா 
அந்த மனிதன்  மனித நேயம் 
உள்ளவனா இல்லையா என்று ? 

கந்தசாமி நடராஜன் 
18/12/2020

வாரம் ஒரு கவிதை

என்ன பெயர் குழந்தைக்கு ?


பிறந்தது குழந்தை …புது உலகம் 
பார்த்தது … அம்மா அப்பா பாட்டி 
தாத்தா என்று பலர் முகம் பார்த்தது 
வியந்தது குழந்தை !

இந்த பெயர்தான் குழந்தைக்கு ..ஆள் 
ஆளுக்கு ஒரு பெயர் சொல்ல சொல்ல 
முழித்தது குழந்தை !

பெயர் ஒன்று போதும் ..ஒரு மெயில் id 
password  தான் முக்கியம் எனக்கு 
சொன்னது குழந்தை பதிலுக்கு !

முழித்தனர் பெற்றோர் ! விழி பிதுங்கி 
நின்றனர் சுற்றமும் நட்பும் !

கந்தசாமி  நடராஜன் 
18/12/2020

வாரம் ஒரு கவிதை

போட வேண்டும் ஒரு கும்பிடு !


காலை இளம் காற்று! மேகம் சூழ்ந்த 
வானம் !
விறு விறு என நடை போட்டேன் 
சுறு சுறுப்பும் நடை பயின்றது என் கூட !

வானம் பார்த்தேன்! கதிரவனுக்கு
ஒரு வணக்கம் சொல்லலாம் என்று 
நினைத்து !

நான் பார்க்கும் சமயம் எல்லாம் 
கதிரவன் மேகத்தின் மேலாடையில் 
மறைத்துக் கொண்டான் தன் முகத்தை !

எனக்கு முகம் காட்ட மாட்டேன் 
என்று சொல்லாமல் சொல்லுகிறானா ?

முகக் கவசம் நான் அணியவில்லை 
அதுதான் காரணமோ கதிரவன் 
அவன் முகம் காட்டாமல் மேகத்தில் 
மறைந்ததற்கு !

எனக்கும் உனக்கும்  இடைவெளி 
எவ்வளவு இருந்தாலும் முகக் 
கவசம் கட்டாயம் உனக்கு என்று 
சொல்லுகிறானோ கதிரவன் ?

நாளை மறக்காமல் முகக் கவசம் 
அணிந்து போட வேண்டும் ஒரு 
கும்பிடு அந்த  காலை இளம் சூரியனுக்கு !

கந்தசாமி நடராஜன் 
13/11/2020 

வாரம் ஒரு கவிதை

நல்ல பாடம் ஒன்று !!!


என் அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டில் 
யார் ? மேல் வீட்டில் யார் ? கீழ் வீட்டில் 
யார் யார் ? 

எதுவும் எனக்கு தெரியாது ! நான் உண்டு என் 
வேலை உண்டு ! அவ்வளவே எனக்கு தெரியும் !
புரட்டிப் போட்டு விட்டான் இந்த அசுரன் !
கொராணாசுரன் !

வீட்டுக்குள் முடக்கி விட்டான் என்னை பல
மாதமாக ! 
ஒரு குட்டி நடை போட மொட்டை மாடிக்கு 
செல்லும் எனக்கு புது நண்பர் கூட்டம் 
இப்போது ! பக்கத்து வீட்டு அன்பர் உட்பட !

பக்கத்து வீட்டு நண்பர் மட்டுமா !
பக்கத்து தெரு அடுக்கு மாடிக் குடியிருப்பு 
அன்பர் பலரும் மொட்டை மாடி நடையில் 
கை அசைத்து ஜாடை மொழியில் பேசும் 
விநோதமும் பார்க்கிறேன் நான் இப்போ !

நானும் மௌன மொழியில் கை அசைத்து 
வணக்கமும் சொல்வது எனக்கே ஒரு 
அதிசயம் ! 

கொரானாசுரன் நம்மை வதைத்த நேரம் 
நேசிக்கவும் செய்து விட்டான் பிற 
மனிதரை !

இதுவும் ஒரு நல்ல பாடமே எனக்கும் 
என்னைப் போல பலருக்கும் !

கந்தசாமி  நடராஜன்