இதோ ஒரு கவிதை மீண்டும் !
ஏன் இல்லை ஒரு கவிதை உன்னிடம்
என்ன இல்லை உன்னிடம் ஒரு கவிதை
எழுத ?
இல்லை என்று சொல்லாமல் வேண்டும் ஒரு கவிதை
எனக்கு
கேட்கிறது நட்பு உள்ளங்கள் பல !
இனிமேலும் இல்லை என்று சொல்வேனா நான் ?
இதோ விதைத்து விட்டேன் மீண்டும் ஒரு
கவிதைக்கு வித்து !முத்து முத்தாகப்
பூத்துக் குலுங்க வேண்டும் மீண்டும் என் கவிதை
பூந்தோட்டம் !
காத்திருக்கிறேன் உங்கள் நல் வாழ்த்துக்கு !
கந்தசாமி நடராஜன்
09/01/2022