பால்ய வீதியில்
================
பால பருவத்தில், வீதியில் துளிர்த்து
படித்த பள்ளியில் அரும்பி , கல்லூரியிலும்
மலர்ந்து செழித்தது எங்கள் நட்பு !
நானும் அவனும் பால்ய நண்பர்கள்
என்னும் ஒரே ஒரு பிணைப்பு
இணைத்து விட்டதே எங்களை
இன்று வரை !
வீதியில் விளையாட்டாய் துளிர்த்த நட்பு
வாடவில்லையே இன்னும் !மணக்குதே
இன்றும்! காரணம் என்ன ?
என் வாழ்க்கை வீதியில் முளைத்த பிற
நட்புகள் பல வெறும் “ரயில் நட்பாய் “
மாறிய காரணம் என்ன ?
இனம் ,மதம் ,குலம் மறந்து என் நண்பனுடன்
கை கோர்த்து ஓடி விளையாடிய
அந்த பால்ய வீதியை இன்று தேடுகிறேன்
நான் ! என் கேள்விக்கு விடை தேட !
K.நடராஜன்
07/10/2018
Advertisements