நவராத்திரி …8ம் நாள் சரஸ்வதி பூஜை ….

Temple images

நவராத்திரி எட்டாம் நாள் (அக்.23) சரஸ்வதி பூஜை. அம்பாளை வெள்ளைத் தாமரையில் அமரவைத்து, வீணை, ஏடு, ஜபமாலையுடன் சரஸ்வதியாக அலங்கரிக்க வேண்டும். “சியாமளா என்றும், “ராஜமாதங்கி என்றும் இவளை அழைப்பர். இவளை வழிபட அறிவுவளர்ச்சி, ஞானம் உண்டாகும். மதுரை மீனாட்சியம்மன் சிவபூஜை அலங்காரத்தில் காட்சி தருகிறாள். மதுரையில், அம்பாளை சுவாமியை விட உயர்ந்தவளாகக் காட்டுவதுண்டு. ஒரு கணவன் தன்மனைவியை உத்தமமான இடத்தில் வைத்து, அவளை நல்ல முறையில் பார்த்துக் கொண்டால், அவள் கணவனைத் தெய்வமெனக் கொண்டாடுவாள் என்ற வாழ்வியல் தத்துவம் இதில் வெளிப்படுகிறது.

நைவேத்யம்: சர்க்கரைப்பொங்கல், சுண்டல், அவல், பொரி.
தூவவேண்டிய மலர்: வெள்ளைத்தாமரை,மருதாணி இலை.

பாட வேண்டிய பாடல்
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாயிருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

 

source::::::Dina Malar…Tamil Daily

Natarajan

 

Leave a comment