அடக்கி வாசி மனிதா நீ !
++++++++++++++++++++
நீ அங்கு செல்லாதே …நீ இங்கு
வராதே ! … சொல்லாமல்
கொள்ளாமல் பரவும் வைரஸால்
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !
என் கையில் எல்லாமே அடக்கம்
என்னை மீறி என்ன நடக்கும்
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !
இயற்கை இன்று போட்டு விட்டது
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை
தன் கோபத்தை !
புரிந்து நடந்து கொள் மனிதா
உன் எல்லைக்கோடு என்ன என்று
தெரிந்து நடந்து கொள் !
இயற்கையின் எல்லைக் கோட்டை நீ
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக்
கோடும் கூட மூடப்படும் உனக்கு !
இயற்கையின் சீற்றத்தின் ஒரு சிறு
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !
கந்தசாமி நடராஜன்