வாரம் ஒரு கவிதை ….” நிழலில் தேடிய நிஜம் ” 2

 

நிழலில் தேடிய நிஜம்
…………………..
நிஜம் நிஜமாய் இருந்தபோது
தேடினோம் நிழலை !
நிஜத்தின் அருமை பெருமை
தெரியவில்லை அப்போது !
நிஜம் நிழல் ஆக மாறிய பின்
நிழலுக்கு மாலை மரியாதை !
சிலையும் கூட சிலர் நிழலுக்கு !
தேடுகிறோம் நிஜத்தை நிழலில் !
இருக்கும் போது மதிக்காத
நிஜத்தை அது இல்லாதபோது
நிஜம் எங்கே எங்கே என்று
நிழலில் தேடி என்ன பயன் ?
Natarajan

Leave a comment