வாரம் ஒரு கவிதை….” ஒரு முறையேனும் ….”

ஒரு முறையேனும் …
………………..
அலை பேசி , கை பேசி எதுவும்
இல்லாமல் தனி ஒருவனாய்
என்னை மறந்து ,இந்த உலகை
மறந்து , வலையின் மாயையில்
இன்னும் சிக்காத ஒரு மண்ணின்
மடியில் நான் ஆடி ஓடி நடை பயில
வேண்டும் ஒரு நாள் முழுதும் !
அந்த மண்ணின் மரத்தில்
குடியிருக்கும் குயிலின் பாட்டு
பாட்டு மட்டும் கேட்க வேண்டும்
ஒரு நாள் முழுதும் நான் !
இது என் தீராத ஆசை !  என்
ஆசை நிறைவேறுமா என் வாழ் நாளில்
ஒரு முறையேனும் ?
Natarajan
in http://www.dinamani.com dated 25th June 2018

Leave a comment