மழை இரவு …
—————
மழை வருமா வராதா …எல்லோர்
மனதிலும் இந்த கேள்வி ஒன்றுதான் !
அந்திக் கருக்கலில் கொட்டியது மழை !
பட்டென கேட்டார் எல்லோரும்
“என்ன மழை இது …வீட்டுக்கு நான்
எப்படி செல்ல ?”
இந்த மழை இரவில் பொழியக் கூடாதா ?
இரவு முழுதும் மழை ….காலையில்
வெய்யில் என்று இருக்கக் கூடாதா ?
மழை நான் கேட்கிறேன் .. மனிதா உன் வீட்டுக்கு
எப்படி செல்வது மழை என்னுடன் பயணித்து என
நீ கேட்கிறாய் !
வீடு என்று ஒன்று இல்லாத நடைபாதை வாசிகள்
மழை இரவிலும் “இரவில் மழை ஏன்” என்று இதுவரை
என்னைக் கேட்டது இல்லையே !
என் வரவுக்கு இறைஞ்சும் நீ… நீ சொல்லும்
நேரம் மட்டும் நான் வர வேண்டும் என்று
நினைப்பது என்ன நியாயம் ?
K.Natarajan
16th July 2018