வாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “

 

என் கையில் தவழும் குழந்தை
===========================
கருவில் உதித்து ஒரு உரு எடுத்து
பெருமையுடன் உரிமை கொண்டாடி
என் கையில் தவழ்கிறாய் நீ இன்று !
பெயர் இல்லாமல் நீ பிறக்கவில்லை
நீ பிறந்த பின் உனக்கு பெயர் வைக்க
அவசியம் இல்லை !
ஒரு பெயருடன் நீ பிறந்து விட்டாய்
உன்னைப் பெற்ற எனக்கு பெருமை
உன்னால் !
ஓரு பெயருடன் பிறந்த நீ  எனக்கு ஒரு
நல்ல பெயரையும் வாங்கித்  தந்து விட்டாய்
நீ பிறந்த அன்றே…. என் அருமை புத்தகமே !
வரிக்கு வரி உன்னைப் படிக்கும் அன்பர்
அனைவருக்கும் பிடித்துப் போகவேண்டும்
உன்னை !
படித்து ரசிக்கும் அன்பர்களிடம்  , குழந்தை நீ வாழ்த்துகள்
பெற்றால் , உன்னைப் பெற்ற எனக்கு பெருமை
பெருமையே !
K.Natarajan
29/12/2018

2 thoughts on “வாரம் ஒரு கவிதை ….” என் கையில் தவழும் குழந்தை “

  1. Seshambal's avatar Seshambal December 29, 2018 / 9:02 am

    Very nice

  2. Natarajan's avatar natarajan December 29, 2018 / 11:26 am

    Thanks for your nice comment…Have Blessed year ahead .

Leave a comment