வாரம் ஒரு கவிதை … ” ஆட்டுக்குட்டியை நனைத்த மழை “

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
+++++++++++++++++++++++++++++++
வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி  ஆடாகவே இருக்கும் !
மழையில்  அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும்  மகிழ்ச்சியில் !
ஆட்டுக்கு தெரியும் மழை  அதை
நனைக்குமே  தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று …! மழை  ஒரு  ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !
ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில்  நம்  வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !
எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத்  தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !
நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல …நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
K.Natarajan
 in http://www.dinamani.com  dated 03/07/2019

Leave a comment