வாரம் ஒரு கவிதை

 வீடு கிடைக்குமா ஒரே ஒரு நாளைக்கு ?


ஒரு நாள் முழுதும் வீட்டுக்குள்ளே 
இருக்கணுமாம் …வெளியே யாரும் 
வரக்கூடாதாம் ஒரு நாள் ! 

எனக்கு வீடே இல்லை …நடைபாதைதான் 
என் வீடு !
அந்த ஒருநாள் மட்டும் ஒரு வீடு கிடைக்குமா 
எனக்கு  நானும் ஒரு வீட்டுக்குள் முடங்கிக்கொள்ள ?

கேட்கிறான் ஒரு நடைபாதை வாசி …
என்ன பதில் சொல்ல அவனுக்கு ? 

கந்தசாமி நடராஜன்

Leave a comment