அப்பாவின் நாற்காலி
+++++++++++++++++++++
அப்பா இல்லை இப்போது அவர் நாற்காலி
மட்டும் வீட்டில் !
நடக்க முடியாமல் இருந்தவருக்கு அவர்
நாற்காலிதான் அலுவலகம் !
வீட்டில் இருந்தபடியே எல்லா வேலையும்
செய்து முடிப்பார் எல்லோருக்கும் !
அது அவர் தனித்துவம் !
எல்லோருக்கும் இரண்டு கால் என்றால்
அப்பாவுக்கு நாலு கால் !
அப்பாவின் நாற்காலி கேட்கிறது இன்று
நான் என் கால் இழந்து நிற்கிறேன்
எங்கே என் சொந்தக்காரர் என்று ?
Kandasami Natarajan
in http://www.dinamani.com dated 11/12/2019