பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஸ்வதந்த்ரம் பற்றி விரிவான அறிக்கை தயார் பண்ண, ஒரு பார்லிமெண்டரி டெலிகே ஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. இதற்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் முன்பே பெரியவா அவருடைய பரம பக்தரும், பரம வைஷ்ணவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சார்யாரை “இந்தியாவில் மத விஷயங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது” என்பது பற்றி பல தந்திகள், கடிதங்கள் அரசுக்கும், பார்லிமெண்டரி டெலிகே ஷனுக்கும் அனுப்பச் சொல்லியிருந்தார். இவைகள் ஒன்றுக்குக் கூட பதில் வந்ததில்லை.
ஏழெட்டு மாசத்துக்கப்புறம் ஒருநாள் பெரியவா கும்பகோணம் பக்கத்தில் உள்ள மேலூரில் முகாம். அன்று வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் வக்கீல்கள்! பெரியவா அவர்களை ஒன்றாக அழைத்திருந்தார்.
“ஒங்களையெல்லாம் இங்க ஏன் வரச்சொன்னேன்னு தெரியுமோ?”
“பெரியவா சொன்னா தெரிஞ்சுக்கறோம்”
“நம்மளோடது எல்லாத்தையும், அதாவது சமுதாயத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு வக்கீல்களுக்குத்தான் இருக்கு. செய்வேளா?” எல்லாரும் உணர்ச்சிமயமானார்கள். பெரியவா சொல்லி ஏதாவது செய்ய முடியாமல் போகுமா?
“வெறுமே செய்யறோம்..ன்னு சொன்னாப் போறாது. இதோ….எதிர்ல இருக்காரே சந்திரமௌலீஸ்வரர்! அவர் முன்னால சத்யப்ரமாணம் பண்ணுங்கோ..நிச்சியம் செய்யறதா!” எல்லோரும் அப்படியே ப்ரமாணம் பண்ணினார்கள். எதற்கு?
“ஒங்க எல்லாரோட முக்யமான கடமை என்ன தெரியுமா? நம்ம constitution ஐ நீங்கள்ளாந்தான் காப்பாத்தி ஆகணும்”
constitution ஆ? அப்படீன்னா? அப்படி ஒன்று இந்தியாவில் அப்போது இல்லவே இல்லையே! இல்லாத ஒண்ணை எங்கிருந்து காப்பாற்றுவது? இதுவரை கேள்விப்படாத வார்த்தை.
“நம்ம தேசத்துக்கு constitution ன்னு ஒண்ணு வரும். அதுல என்னென்ன சேக்கணும்…ன்னு பேச்சு வரும். அப்போ…நம்ம மதத்தை காப்பாத்த எதெதை சேக்கணுமோ, அதை இப்போவே யோஜிக்கணும். அதுல முக்யமான விஷயம் என்னன்னா……..அரசாங்கம், மதத்தை control பண்ற விஷயம் இருக்கப்டாது. மதம்..ங்கறது அவாவா நம்பிக்கைக்கு ஏத்தாமாதிரி நடக்கறதுதான். அதுல அரசாங்கம் நுழையவே …..ப்டாது! இந்த மதவிஷயம் ஜனங்களோட “fundamental right “ஆ……. வரணும். இதை constitution ல சேக்கறதா promise பண்ணுங்கோ!……”
வக்கீல்கள் திகைத்து நின்றனர். பெரியவாளுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோன்றுகிறது? எப்படி இத்தனை நுணுக்கமாக யோஜிக்கிறார்?
அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் எதேச்சையாக ஒருநாள் “ஹிந்து” ஆபீசுக்கு வந்தபோது, ஏகப்பட்ட கூட்டம். “பார்லிமெண்டரி டெலிகே ஷேன் இந்தியாவுக்கு வந்திருக்கு. இங்க ஆபீஸ்ல அவர்களுக்கு “டீ” பார்ட்டி” என்றார்கள். அக்னிஹோத்ரம் அந்த வாய்ப்பை நன்றாக உபயோகித்து அவர்களை பார்த்து பேசி, ஏழெட்டு மாசங்களாக தாம் அனுப்பிய லெட்டர்கள், தந்திகள் எல்லாவற்றையும் பற்றி சொன்னார். மத விஷயத்தில் அரசாங்க தலையீடு இருக்கக் கூடாது என்று சொன்னார்.
“இது ரொம்ப புரியாத பெரிய விஷயமாக இருக்கே! எங்களோட நாட்டிலேயே அரசாங்கம்தான் சர்ச்சுகளை நிர்வகிக்கிறது. நீங்கள் டெல்லிக்கு வந்து cabinet ஐ பார்த்து பேசுங்கள்” என்று சொன்னார்கள். பெரியவா சொன்ன விஷயம். மடமடவென நடந்தது. டெல்லிக்கு மடத்து சார்பாக போன அக்னிஹோத்ரம், சர்தார் வல்லபபாய் படேல் ஐ சந்தித்தார். “unity in divecity ” தான் பெரியவாளோட கருத்து. “மேலேழுந்தவாரியா எல்லாரும் பிரிஞ்சு இருக்கறா மாதிரி இருந்தாலும், ஆழமாப் பார்த்தால், எல்லாரும் ஒண்ணாத்தான் இருப்பா” என்ற பெரியவாளுடைய கருத்தை சொன்னதும், படேல் அதிர்ந்து விட்டார்!
“யார் அது? இப்பேர்ப்பட்ட எண்ணங்களைச் சொல்லும் மதத் தலைவர்? வக்கீலுக்கு படித்தவரா? பெரியவாளைப் பற்றி சொன்னார். கடைசியில் constitution இல் சேர்க்கவேண்டி பெரியவாளிடம் நகலைக் கொண்டுவந்தார் அக்னிஹோத்ரம். பெரியவா சொன்னது இதுதான்……….
“EVERY RELIGION ‘S DENOMINATIONS OR ANY RELIGION THERE OF ” என்ற வாக்குதான். படேல் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். “ஒரு பெரிய சட்ட நிபுணரால் மட்டுமே இந்த மாற்றங்களைப் பண்ண முடியும். ஒரு மடாதிபதி இவ்வளவு விவரம் தெரிந்தவரா!”
பெரியவா சாக்ஷாத் சட்டநாதன் இல்லையா? இன்றும் Indian Constitution article 26 எடுத்துப் பார்த்தால், இந்த வார்த்தைகள் “ஆம். தெய்வத்தின் குரல்” அதில் இடம் பெற்றுள்ளது!