Thanks to Shri Varagooran mama in FB for the article…

பரணீதரன் {மெரீனா] சொன்ன ஒரு நிகழ்ச்சி ” நாத்தனார் கலகம் ”
1988-ல் காஞ்சியை அடுத்த ஓரிக்கையில் தங்கியிருந்த ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு சென்றிருந்தேன்.கூட்டமே இல்லை கைங்கர்யம் பண்ணும் நாலைந்து இளைஞர்கள் மட்டுமே அருகில் இருந்தனர். நமஸ்காரம் செய்தேன்.
அருகில் வரும்படி அழைத்து உட்காரச் சொன்னார்.
இப்ப என்ன நாடகம் போட்டுண்டிருக்கே?” என்று பெரியவா கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன்.
அதுவரை என் நாடகங்களைப் பற்றி சுவாமிகள் நேரடியாக என்னிடம் விசாரித்ததில்லையாதலால், சற்றும் எதிபாராத வகையில் திடீரென்று பெரியவா அப்படிக் கேட்டத்துதான் எனது ஒரு கணநேரத் திகைப்புக்குக் காரணம்.
“நாத்தனார் கலகம்” என்றேன் நான்.
“என்ன கதை? அதில என்ன சொல்லியிருக்கே?”
இக்கட்டான நிலைமை.”கதையை விரிவாகச் சொல்வதா-சுருக்கமாகக் கூறுவதா? எப்படித் தொடங்குவது,எங்கே தொடங்குவது? எதைச் சொல்வது,எதை விடுவது? இதற்கு முன் பெரியாவாவிடம் கதை சொல்லிப் பழக்கமில்லையே!’
இவ்வாறு சிந்தித்தப்படியே, கதையை விட்டுவிட்டு நாடகத்தின் மையக் கருத்தைக் கூறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
“இப்பெல்லாம் பிள்ளைகள் அப்பா அம்மாவைச் சரியா கவனிச்சுக்க மாட்டேங்கறா,நிறைய சம்பாதிக்கறா.அப்பாவோட பணமும்
வேண்டியிருக்கு. ஆனா அன்பா இருக்கமாட்டேங்கிறா.பெத்தவா வீட்டை விட்டுவிட்டு, விருத்தாச்ரமங்களைத் தேடிண்டு
போகவேண்டியிருக்கு,’இதை வெச்சுண்டு கதை எழுதியிருக்கேன்!’ என்று கூறினேன்.
“வாஸ்தவம்தான். என்கிட்டேகூட அப்பப்போ சிலபேர் வந்து “பையன் வெளிநாட்டிலே, உத்தியோகம் பார்க்கறான்.ஆயிரம்
ஆயிரமா சம்பாதிக்கிறான். நாங்க இங்கே தனியா திண்டாடறோம்; சாப்பாட்டுக்கே வழியில்லை,மடத்துக்கு…
View original post 281 more words