வாரம் ஒரு கவிதை….” நீர்ப் பரப்பில் ஒரு மீன் “

நீர்ப் பரப்பில் ஒரு மீன்
======================
சுற்றி சுற்றி வருது  அந்த ஒரு மீன்
மீன் தொட்டியில் தனியாக !
தன் துணை மீனையும் இன மீன்களையும்
காணாமல் தவிக்குது இன்று !
நேற்று வரை ஒரு பெரிய தொட்டியில்
அந்த மீன் ஒரு கடையில் !
வாஸ்து மீன் அந்தஸ்த்தில் அந்த மீன்
இன்று ஒரு சிறிய தொட்டியில் ,ஒரு
வீட்டின் மூலையில் !
வாஸ்து மீன் வந்த மகிழ்ச்சியில் அந்த
வீடு ! தங்கள் அந்தஸ்து உயரும் என்னும்
நம்பிக்கையில் வீட்டில் எல்லோரும் !
தான் ஒரு வாஸ்து மீன் என்று புரியாமல்
தொட்டியில் தனியாக சுற்றி சுற்றி மற்ற
மீன்களைத் தேடுது அந்த ஒரு மீன் !
என்ன அய்யா உங்கள் வாஸ்து மோகம் ?
மீன் தொட்டியில் தனியாய் தவிக்கும் ஒரு மீனுக்கும்
நீர்ப் பரப்பு விடுத்து  நிலத்து  மண்ணில் துள்ளித்
துடிக்கும் ஒரு மீனுக்கும் இல்லை பெரிய வித்தியாசம் !
வாஸ்துவின் பெயரால் அவஸ்தை மீனுக்கு ! இது
புரிய வேண்டாமா நமக்கு ? தொட்டியில் மீனை நம்
வீட்டில் சிறை வைக்க உரிமை ஏது  நமக்கு ? விட்டு
விடுவோம் மீனை அதன் வீட்டில்! பெரிய நீர்ப்பரப்பில் !
K.Natarajan
02/02/2019

Leave a comment