மகாத்மா காந்தி
++++++++++++++
வாங்கித் தந்தார் தந்தை காந்தி நம்
மண்ணுக்கு விடுதலை ! அப்போதே
சொன்னார் இந்த மண் உன் பூர்விக
சொத்து அல்ல …உன் பிள்ளைக்கு
நீ பட்டிருக்கும் கடன் என்று !
கடனாளி நீ இந்த மண்ணுக்கு சொந்தம்
கொண்டாட முடியுமா ?
உனக்கு என்ன உரிமை கடன் சொத்தை
அழிக்க ? கோடிட்டு காட்டினார் உன்
எல்லை என்ன என்று அன்றே மகாத்மா !
நிலை மறந்து எல்லை தாண்டி விட்டாய்
மனிதா நீ இன்று !
இந்த மண்ணின் வளம் அழிக்க கடனாளி
உனக்கு ஏது உரிமை ? கேட்கிறார் இன்று
உன் பிள்ளைகள் ! பதில் சொல்லு நீ !
கேள்வி கேட்கும் ஓவ்வொரு பிள்ளையும்
ஒரு மகாத்மா காந்தியே !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com dated 02/10/2019