
Morning Moon before sunrise@Chennai


கவிதையும் கொரானாவும் …
+++++++++++++++++++++++
எழுதி எழுதிப் பார்க்கிறேன்
அழுகை தான் வருதே தவிர
ஒரு கவிதையும் பிறக்கவில்லை
இந்த வாரம் !
வாரம் ஒரு கவிதை ஒரு பாரமாகத்
தெரியுது இந்த வாரம் !
அரண்டு கிடைக்கும் உலகில் நான் மட்டுமா
என் வீட்டு குவாரண்டைனில் ?
இல்லை என் கவிதையும் சேர்ந்தா ?
கந்தசாமி நடராஜன்


அடக்கி வாசி மனிதா நீ !
++++++++++++++++++++
நீ அங்கு செல்லாதே …நீ இங்கு
வராதே ! … சொல்லாமல்
கொள்ளாமல் பரவும் வைரஸால்
மிரண்டு போய் இருக்குது உலகம் !
அரண்டு போய் இருக்கிறான் மனிதன் !
என் கையில் எல்லாமே அடக்கம்
என்னை மீறி என்ன நடக்கும்
என்னும் இறுமாப்பு மனிதனுக்கு !
இயற்கை இன்று போட்டு விட்டது
எல்லோருக்கும் ஒரு வாய் காப்பு !
கோடிட்டு காட்டி விட்டது இயற்கை
தன் கோபத்தை !
புரிந்து நடந்து கொள் மனிதா
உன் எல்லைக்கோடு என்ன என்று
தெரிந்து நடந்து கொள் !
இயற்கையின் எல்லைக் கோட்டை நீ
தாண்டினால் உன் நாட்டின் எல்லைக்
கோடும் கூட மூடப்படும் உனக்கு !
இயற்கையின் சீற்றத்தின் ஒரு சிறு
பொறிதான் நீ காண்பது இன்று !
அடக்கி வாசி மனிதா நீ இனிமேல் !
கந்தசாமி நடராஜன்

மனித நேயம் என்னும் மருந்து
கண்ணுக்குத் தெரியாமல் பரவுவது
வைரஸ் …புதுப் புதுப் பெயருடன் !
கண்ணுக்குத் தெரிந்தே பரவுவது
வாட்ஸாப் வைரல் !
தெரியாமல் பரவும் வைரஸை விட
தெரிந்தே பரவும் வைரலின்
வேகமும் தாக்கமும் கொடுமை !
தெரியாமல் வளரும் வைரஸை
தடுக்க முடியாது நம்மால்..ஆனால்
தெரிந்தே பரப்ப விடும் வதந்தி
என்னும் வைரலைத் தடுக்க
முடியும் நம்மால் !…மனித
நேயம் என்னும் மருந்து கொண்டு !
வதந்தி என்னும் வைரலைத் தடுப்போம் நாம்
எடுப்போம் ஒரு சபதம் இன்று அதைத் தடுக்க
மனித நேயத்தின் பெயரில் !
கந்தசாமி நடராஜன்
Source: Congratulations, Christina Koch!
