” கடி”தான் ….இருந்தாலும் படிக்கலாம் …சிரிக்கலாம் …!!!

சத்யவான் – சாவித்திரி
தன் கணவனை எமனிடம் இருந்து போராடி
வரங்கள் பெற்று மீட்டாள் !!
.
.

# கதையின் நீதி: பொண்டாட்டி கிட்ட இருந்து புருசனை “எமனே” நினைச்சாலும் காப்பாத்த முடியாது !

“ரவுடி வீட்ல பொண்ணு எடுத்தது தப்பா போச்சு…!!”

“ஏன்..??”

“கரண்டிய எப்பவும் முதுகுல சொருகி வெச்சிருக்கா…!!”


உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே… இப்ப எப்படியிருக்கார்.

ஏதோ பரவாயில்லை… காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?

மாணவன் : ஊறுகாய் சார். . . . . . .

**********************************************************

“வக்கீல் சார்… வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது.”

“ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?”

**********************************************************

Friend 1: “ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும் தானா மச்சீ?

Friend 2: ”பின்ன என்ன செய்யணும்?”

Friend 1 ”கடிக்க….ஏதாவது?”

Friend 2 ”நாய் இருக்கு… அவுத்துவிடவா?”

**********************************************************

டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க

 

மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை’கோஸ்’ சாப்பிடலாமா?

Source…input from a friend of mine

Natarajan

Leave a comment