வாரம் ஒரு கவிதை …” யார் மனிதன் ” ?

 

யார் மனிதன் ?
++++++++++++++
மனிதன் கையில் இருக்கும் கை பேசி
தனி ஒரு பலமாக ஆட்டி வைக்கிறது
மனிதனை அவன் என்ன செய்ய வேண்டும்
ஒரு நாளில் என்று !
மனிதனுக்கு அடங்க வேண்டிய கை
பேசியும்  வலை நுட்பமும் இப்போது
விரித்து விட்டது மாய வலை மனிதனுக்கு !
வலைக்குள் சிக்கிய மனிதன் முழிக்கிறான்
வெளியே வரும் வழி தெரியாமல் !
ஆறறிவு படைத்த மனிதன்  நான்
மனிதன் நான் மனிதன் என்கிறான் !
ஆறறிவைப் பின்னுக்குத் தள்ளிய
வலை நுட்பம் கேட்கிறது இன்று
யார் மனிதன்  யார் மனிதன் என்று !
Kandaswamy Natarajan
in http://www.dinamani.com  dated  23/10/2019

வாரம் ஒரு கவிதை ….” மதுரை “

 

மதுரை
+++++++
சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில்தான்
மதுரை தமிழ் இன்றும் மதுரத் தமிழே !
மாட வீதியும் சிகரம் தொடும் கோபுரங்களும்
கூடல்  நகருக்கு ஒரு தனி முகவரி !
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட
பரமேஸ்வரன்  பொற்பாதம் பட்ட இடம்
மதுரை !
அண்ணல் காந்தி அவர் முழு ஆடை துறந்து
கதர் ஆடைக்கு மாறிய நகரும் மதுரையே !
தேமதுரத் தமிழ் ஓசை அன்றும் இன்றும்
ஒலிக்கும்  நகரும் மதுரையே !
மதுரையின் மதுரம் எல்லாம் மறந்து
மதுரை என்றாலே அடிதடி, வெட்டு குத்து ,
அடாவடி அரசியல் , போக்கிரித்தனம்
என்று வரிந்து கட்டி  மதுரையைப்
படம் பிடித்துக் காட்டும் தமிழ் திரை
உலகத்துக்கு அப்படி என்ன வெறுப்பு
நம்ம  மதுரை மீது ?
Kandaswamy Natarajan  in http://www.dinamani.com  dated 17th oct 2019