வாரம் ஒரு கவிதை ….”சிரிப்பு ” 2

சிரிப்பு  2
++++++++
தினமும் பார்க்கிறேன் என் குடியிருப்பில்
வசிக்கும் அவரை நான் …காலை
மாலை நடை பயிலும் நேரம் !
சிரித்து வணக்கம் சொல்லுவேன் அவருக்கு
நான் ! பதிலுக்கு வணக்கம் இல்லை …
முகத்தில் சிரிப்பு கூட இருக்காது !
கடுவன் பூனை என்று அவருக்கு பெயராம்
எங்கள் குடியிருப்பில் !  ஒரு குழந்தையைப்
பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வராது அவருக்கு !
சிரிக்கவே காசு கொடுக்க வேண்டும் போல
அவருக்கு…நினைத்துக் கொள்வேன் !
ஒரு நாள் அவரைக்  கேட்டேன் ‘அய்யா
உங்கள் பணி என்ன , எங்கே “? என்று !
நான் ஒரு ” நகைச்சுவைப் பயிற்சியாளர் ” !
சொன்னார் அவர் !
பொத்துக்கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு !
அவர் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பே
இல்லை அப்போதும் !
Kandasami Natarajan
05/09/2019

வாரம் ஒரு கவிதை ….”சிரிப்பு “

சிரிப்பு
++++++
சிரித்து வாழ வேண்டும் நீ !பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே நீ !
இந்த சொல்லுக்கு விதி விலக்கு
நான் !
நான் சிரிப்பதில்லை .. என்னைப்
பார்த்து மற்றவர் சிரிக்கிறார் !
ஆம் ! நான் ஒரு நல்ல நகைச்சுவை
நடிகன் …மேடையிலும் திரையிலும் !!!
Kandasami Natarajan
in www. dinamani.com  dated 03/09/2019
03/09/2019

வாரம் ஒரு கவிதை …”பறவை “

பறவை
+++++++
கூண்டிலிருந்து வெளியே வந்த பறவை
முன்னால்  மண்டியிட்டான் மனிதன்
மன்னிப்பு கேட்க! … நீ இப்போ
ஒரு சுதந்திரப் பறவை என்றான் !
நான் எப்போதுமே சுதந்திரப் பறவைதான்
எனக்கு எல்லைக் கோடு என்று எதுவும்
இல்லை விண்ணில் பறக்க !
உன்னைப் போல் எனக்கு பாஸ்போர்ட்
விசா என்று எதுவும் தேவை இல்லை
எனக்கு எந்த மண்ணிலும் தரை இறங்க !
சொன்னது பறவை !
இப்போதும் மனிதன் குனிந்தான்
மண்ணில் தன் முகம் பதித்தான்
வெட்கத்துடன் !
K.Natarajan
in http://www.dinamani.com  dated 28/08/2019