படித்ததில் ரசித்தது ….ஆன்மிக சிந்தனை …..

source:::: ” Dinamalar”….Tamil daily…மஹா பெரியவாவின் ஆன்மிக அறிவுரை ….

Natarajan

1..மனநிறைவே தரமான வாழ்க்கை……

* அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.
* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையான ஸ்தாணு பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.
* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.
* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.
* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.
* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.
* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.
* எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.
* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடி யும் …..

2..எல்லா ஊரிலும் செல்லுபடியாகும் பணம் …..

நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.

நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்’ இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.

படித்ததில் பிடித்தது ….மஹா பெரியவா ….கண்ணதாசன் பார்வையில் …

source::::: input from one of my friends…. must read…

Natarajan

அதோ, போய்க்கொண்டு இருக்கிறார். – அர்த்தமுள்ள இந்து மதம், எட்டாம் பாகம் நிறைவு பகுதியில், கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.

….இப்படிப்பட்ட யோகம் கை வந்த ஒருவர், காஞ்சி பெரியவர்.

அதோ, அவர் எங்கே போகிறார் என்று சொல்லாமலேயே போய் கொண்டு இருக்கிறார்.  இந்த வயதிலும் எந்த வாகனத்திலும் ஏறாமல் போய்க்கொண்டிருக்கிறார்.

கைப்பிடி அவலில் காலமெல்லாம் வாழும் அந்த மகாயோகி தள்ளாத வயதிலும் வாலிபனை போல் புனித யாத்திரை தொடங்கி  இருக்கிறார்.  தெய்வ நம்பிக்கை உச்சத்துக்கு போய் விட்டால் வயது தோன்றாது, பசி தோன்றாது.
உள்ளொளி ஒன்று பரவி விரவி நிற்கிறது.  அதோ, அந்த ஒளியோடு அந்த மகாயோகி போய்க்கொண்டு இருக்கிறார்.  அது வெறும் மானிட ஸ்தூலத்தின் யாத்திரை அன்று. அது ஆன்ம யாத்திரை.
லோகாதய சுகத்தை முற்றும் துறந்துவிட்டு தார்மீக வடிவெடுத்து அவர்கள் புறப்படும்போது தர்மம் நடைபாதை விரிக்கிறது.  மகா யோகம் மலர்கள் தூவுகிறது.  மகாராஜாக்களுக்கு இல்லாத மரியாதை அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆந்திராவில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. அதன் மூலஸ்தானத்தில் இன்னும் சிலை வைக்கப் படவில்லை. அங்கே போய் காஞ்சி பெரியவர் ஓரிரவு தங்கினாராம். சிலை பிரதிஷ்டை ஆகி விட்டது என்று ஆந்திர மக்கள் எல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.
அவர் பிராமண ஜாதியின் தலைவரல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்க கூடாது.
உலகெங்கிலும் உள்ள அக்ஞாநிகளுக்கு ஞான கண் வழங்கும் பேரொளி.  அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருஷங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு ‘ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற சங்கராச்சாரிய சுவாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
அந்த ஞான பழத்தை தரிசித்தபோது நான் பெற்ற உள்ளொளியை விவரிக்க முடியாது. கோடியில் ஒருவரே எப்போதாவது இப்படி ஆக முடியும். செஞ்சி கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்கு ராஜா அல்ல. காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல.  ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார்.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். இறைவன் கருணையினால் நமக்கு கிடைத்த அந்த வரம், இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும். தாய், குழந்தைக்கு தாலாட்டு பாடும் போது அவரை பற்றி பாட வேண்டும். பள்ளிக்கூட பாட புத்தகங்களில் அவரை பற்றி குறிக்க வேண்டும்.  ஒரு உத்தமமான யோகியை ‘பிராமணன்’ என்று ஒதுக்கி விடுவது, புத்தியுள்ளவன் காரியமாகாது. மேதைகளும் கற்பு அரசிகளும் எந்த ஜாதியிலும் பிறக்கலாம். யோகிகளில் ஒரு சாதாரண யோகியை கூட ஒதுக்க கூடாது என்றால், இந்த மகா யோகியை பிராமணர் அல்லாதார் ஒதுக்குவது எந்த வகையில் நியாயம்?
அதோ அவர், நடந்து போய் கொண்டு இருக்கிறார். புத்தன் சொன்னதை விட, அவர் நமக்கு அதிகமாக சொல்லி இருக்கிறார். இயேசுவின் தத்துவங்களை விட அதிகமான தத்துவங்களை வாரி இறைத்து இருக்கிறார்.  அவர் ஜாதி வெறியர் ஆகவோ, மத வெறியர் ஆகவோ, ஒரு நாளும் இருந்தது இல்லை.
அரசியல் வில்லங்கங்களில் மாட்டி கொண்டது இல்லை.
பகவான் கீதையில் சொன்னது போல் வாழ்ந்து கொண்டு இருப்பவர் அவர் ஒருவரே.
அதோ, அவர் நடந்து போய் கொண்டு இருக்கிறார். அந்த காலடி சுவடுகளை தொடர்ந்து செல்லுங்கள்.
அதுவே உங்கள் யோகமாக இருக்கட்டும்……

படித்ததில் பிடித்தது …..மஹா பெரியவா அருள் ….

SOURCE:::::INPUT FROM MY FRIEND ….ONE MORE ANECDOTE ON MAHA PERIAVAA”S DIVINE GRACE…

Natarajan

Courtesy: Sri.Mayavaram Guru
பெரியவாளுடைய ‘முரட்டு’ பக்தர்களுள் ஒருவர் கல்யாணசுந்தரமையர். ஒருமுறை காசிக்குப் போய் தன் அப்பாவுக்கான ஸ்ராத்தாதிகளை பண்ணவேண்டும் என்பது அவருடைய நெடுநாள் ஆசை. அடிக்கடி காசிக்கு போய்வரும் மற்றொரு பக்தரிடம் காசியில் உள்ள சங்கர மடத்தைப் பற்றி தெரிந்து கொண்டு, தன் பயணத் திட்டத்தை அழகாக தயார் பண்ணிக்கொண்டார். பெரியவாளுடைய அனுக்ரகத்துடன் காசி போய் சேர்ந்து த்ருப்தியாக கார்யங்களைப் பண்ணினார். நல்லபடியாக எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள் காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தர்சனம் பண்ணிவிட்டு, சங்கர மடத்துக்கு வருவதற்கு ஒரு சின்ன சந்தைக் கடந்து வரவேண்டும். இவரோ, கையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் தங்களுடைய டிக்கெட், பணம்,பயண விவரம் என்று எல்லாவற்றையும் பத்திரமாக வைத்து, அந்த பிளாஸ்டிக் பையை ஒரு சின்ன மஞ்சள் துணிப்பைக்குள் பத்திரமாக வைத்திருந்தார். காஞ்சி காமகோடீஸ்வரர் கோவிலுக்குப் போய்விட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தன்னுடைய அடுத்த ‘பிளான்’ என்ன? என்பதற்காக தன்னுடைய ‘bag ‘ கில் இருந்த மஞ்சள் பையை துழாவினால், காணோம்! “பகீர்” என்றது!

“சர்வேஸ்வரா! மஹா ப்ரபோ!” என்று வாய்விட்டே அலறிவிட்டார்! உடலெல்லாம் நடுங்குகிறது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர்! இனி அடுத்து என்ன செய்வது? ஆகாரத்துக்குக் கூட கையில் சல்லிக்காசு கிடையாது! கண்கள் இருட்டிக் கொண்டு வர, அங்கிருந்த தூணில் சாய்ந்துவிட்டார்! குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்ததால், இவருடைய நிலைமை தெரியாது. “சர்வேஸ்வரா! ஒன்னை நம்பித்தானே இவ்வளவு தூரம் குடும்பத்தோட கெளம்பினேன்? இப்பிடி என்னை நிர்கதியா தவிக்கவிட்டுட்டியே?” என்று வாய்விட்டு அரற்றினார், புலம்பினார். அவரைக் கடந்து போனவர்கள் இவருடைய பாஷை புரியாததால், பாவம், பகவானிடம் புலம்புகிறார் போலிருக்கு என்று பரிதாபமான பார்வையை வீசிவிட்டுப் போனார்கள். சுமார் ரெண்டு மணிநேரம் இந்த புலம்பல். குடும்பத்தாரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.

பெரியவாளுடைய அனுக்ரகம் இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது…………குடும்பமே இடிவிழுந்த மாதிரி சோகமாக உட்கார்ந்திருக்கும்போது, சத்தமே இல்லாமல் ஒரு சைக்கிள்
ரிக் ஷா கோவிலுக்கு எதிரில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வயஸான ‘பெரியவர்’ இறங்கினார். லுங்கி அணிந்திருந்தார். அவரது கையில் “மஞ்சள் பை”. ரொம்பத் தெரிந்தவர் போல் நேராக கல்யாண சுந்தரமையர் இருந்த இடத்தை நோக்கி வந்தார்……..

“இது ஒன்னோடதா பாரு! வழில தவறவிட்டுட்டு வந்துட்டியே!” என்று கண்டிப்புடன் ஹிந்தியில் சொன்னார். மஹா அதிர்ச்சியுடன் மஞ்சள் பையை வாங்கிக் கொண்டு, அந்த பெரியவருக்கு நன்றி சொல்ல தலையை தூக்குவதற்குள், வந்த வேகத்தில் போய்விட்டார்! கோவிலில் இத்தனை கும்பல் இருக்கும்போது, அந்த பெரியவர் சரியாக இவரிடம் வந்து எப்படி பையைக் குடுத்தார்? அதுவும் ரெண்டு மணி நேரம் கழித்து! வந்தவர் மாயமாக உடனே எப்படி மறைந்தார்?

பைக்குள் எல்லாம் பத்திரமாக அப்படியே இருந்தது. காஞ்சிபுரம் இருக்கும் திசையை நோக்கி விழுந்து விழுந்து கும்பிட்டு, அழுவதைத் தவிர அக்குடும்பத்தாரால் அப்போதைக்கு வேறு எதுவும் பண்ணத் தோன்றவில்லை.

“ஹஸ்தாமலகம்” “உள்ளங்கை நெல்லிக்கனி” யாக இருக்கும் நம் ஆத்மஸ்வரூபமான பெரியவாளை அருகே மிக அருகே என்று நினைத்தால் மிகமிக அருகில் இருப்பார்! அப்பாலுக்கப்பாலாய் என்று எங்கோ இருப்பதாக நினைத்தால், எங்கோ தள்ளி இருப்பதாக தோன்றும். தப்பு நம் பேரில்தான். அவர் எப்போதும், எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறார்.

படித்ததில் பிடித்தது ….பக்தரை காக்கும் மகாபெரியவா ….

SOURCE:::: INPUT RECD. FROM ONE OF MY CONTACTS WHO IS A STAUNCH DEVOTEE OF KANCHI MUTT…

NATARAJAN.K

காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம் காட்டிக் கொடுத்தது. இதை மகா பெரியவாளும் கவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ”எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். ‘காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்” என்றார் குரல் தழுதழுக்க.
”ஓஹோ… அப்படியா சொன்னார்..?” என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து… ”எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா… இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா… தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்” என்று கதறினார்.

பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க… நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ”இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!” என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பிக்ஷை தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பிக்ஷை யில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பிக்ஷை செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ”எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!” என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, ”’என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு… இப்ப ஏன் போகணும்கறே?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ”இல்லே பெரியவா… சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்…” என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் ‘வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். ‘வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள். ”என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!” என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். ‘யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் ‘வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
‘பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே… பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன… சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
”பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்” எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ”சரிதான்… என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!” என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் ‘வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!

hara hara sankara

Respected Friends,
Pleased to share an interesting forward from other group
———————————————-
பெரியவா எப்போதுமே மற்ற மதங்களை பற்றி விமர்சனம் பண்ணியது கிடையாது. அவரவர் மதக் கொள்கைகளில் அவரவருக்கு பிடிப்பு இருக்கவேண்டும் என்றுதான் சொல்லுவார். இந்த நிகழ்ச்சி இந்திய ஸ்வதந்த்ரத்துக்கு முன்னால் நடந்த மிக முக்யமான ஒன்று.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய ஸ்வதந்த்ரம் பற்றி விரிவான அறிக்கை தயார் பண்ண, ஒரு பார்லிமெண்டரி டெலிகே ஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. இதற்கு கிட்டத்தட்ட ஏழெட்டு மாசம் முன்பே பெரியவா அவருடைய பரம பக்தரும், பரம வைஷ்ணவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தத்தாச்சார்யாரை “இந்தியாவில் மத விஷயங்களில் அரசாங்கம் தலையிடக் கூடாது” என்பது பற்றி பல தந்திகள், கடிதங்கள் அரசுக்கும், பார்லிமெண்டரி டெலிகே ஷனுக்கும் அனுப்பச் சொல்லியிருந்தார். இவைகள் ஒன்றுக்குக் கூட பதில் வந்ததில்லை.

ஏழெட்டு மாசத்துக்கப்புறம் ஒருநாள் பெரியவா கும்பகோணம் பக்கத்தில் உள்ள மேலூரில் முகாம். அன்று வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், வந்திருந்த பக்தர்களில் பெரும்பாலானோர் வக்கீல்கள்!  பெரியவா அவர்களை ஒன்றாக அழைத்திருந்தார்.

“ஒங்களையெல்லாம் இங்க ஏன் வரச்சொன்னேன்னு தெரியுமோ?”

“பெரியவா சொன்னா தெரிஞ்சுக்கறோம்”

“நம்மளோடது எல்லாத்தையும், அதாவது சமுதாயத்தை காப்பாத்த வேண்டிய பொறுப்பு வக்கீல்களுக்குத்தான் இருக்கு. செய்வேளா?” எல்லாரும் உணர்ச்சிமயமானார்கள். பெரியவா சொல்லி ஏதாவது செய்ய முடியாமல்  போகுமா?

“வெறுமே செய்யறோம்..ன்னு சொன்னாப் போறாது. இதோ….எதிர்ல இருக்காரே சந்திரமௌலீஸ்வரர்! அவர் முன்னால சத்யப்ரமாணம் பண்ணுங்கோ..நிச்சியம் செய்யறதா!” எல்லோரும் அப்படியே ப்ரமாணம் பண்ணினார்கள். எதற்கு?

“ஒங்க எல்லாரோட முக்யமான கடமை என்ன தெரியுமா? நம்ம constitution ஐ நீங்கள்ளாந்தான் காப்பாத்தி ஆகணும்”

constitution ஆ? அப்படீன்னா? அப்படி ஒன்று இந்தியாவில் அப்போது இல்லவே இல்லையே! இல்லாத ஒண்ணை எங்கிருந்து காப்பாற்றுவது? இதுவரை கேள்விப்படாத வார்த்தை.

“நம்ம தேசத்துக்கு constitution ன்னு ஒண்ணு வரும். அதுல என்னென்ன சேக்கணும்…ன்னு பேச்சு வரும். அப்போ…நம்ம மதத்தை காப்பாத்த எதெதை சேக்கணுமோ, அதை இப்போவே யோஜிக்கணும். அதுல முக்யமான விஷயம் என்னன்னா……..அரசாங்கம், மதத்தை control பண்ற விஷயம் இருக்கப்டாது. மதம்..ங்கறது அவாவா நம்பிக்கைக்கு ஏத்தாமாதிரி நடக்கறதுதான். அதுல அரசாங்கம் நுழையவே …..ப்டாது! இந்த மதவிஷயம் ஜனங்களோட “fundamental right “ஆ……. வரணும். இதை constitution ல சேக்கறதா promise பண்ணுங்கோ!……”

வக்கீல்கள் திகைத்து நின்றனர். பெரியவாளுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோன்றுகிறது? எப்படி இத்தனை நுணுக்கமாக யோஜிக்கிறார்?

அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார் எதேச்சையாக ஒருநாள் “ஹிந்து” ஆபீசுக்கு வந்தபோது, ஏகப்பட்ட கூட்டம். “பார்லிமெண்டரி டெலிகே ஷேன் இந்தியாவுக்கு வந்திருக்கு. இங்க ஆபீஸ்ல அவர்களுக்கு “டீ” பார்ட்டி” என்றார்கள். அக்னிஹோத்ரம் அந்த வாய்ப்பை நன்றாக உபயோகித்து அவர்களை பார்த்து பேசி, ஏழெட்டு மாசங்களாக தாம் அனுப்பிய லெட்டர்கள், தந்திகள் எல்லாவற்றையும் பற்றி சொன்னார். மத விஷயத்தில் அரசாங்க தலையீடு இருக்கக் கூடாது என்று சொன்னார்.

“இது ரொம்ப புரியாத பெரிய விஷயமாக இருக்கே! எங்களோட நாட்டிலேயே அரசாங்கம்தான் சர்ச்சுகளை நிர்வகிக்கிறது. நீங்கள் டெல்லிக்கு வந்து cabinet ஐ பார்த்து பேசுங்கள்” என்று சொன்னார்கள்.  பெரியவா சொன்ன விஷயம். மடமடவென நடந்தது. டெல்லிக்கு மடத்து சார்பாக போன அக்னிஹோத்ரம், சர்தார் வல்லபபாய் படேல் ஐ சந்தித்தார். “unity in divecity ” தான் பெரியவாளோட கருத்து. “மேலேழுந்தவாரியா எல்லாரும் பிரிஞ்சு இருக்கறா மாதிரி இருந்தாலும், ஆழமாப் பார்த்தால், எல்லாரும் ஒண்ணாத்தான் இருப்பா” என்ற பெரியவாளுடைய கருத்தை சொன்னதும், படேல் அதிர்ந்து விட்டார்!

“யார் அது? இப்பேர்ப்பட்ட எண்ணங்களைச் சொல்லும் மதத் தலைவர்? வக்கீலுக்கு படித்தவரா?   பெரியவாளைப் பற்றி சொன்னார். கடைசியில் constitution இல் சேர்க்கவேண்டி பெரியவாளிடம் நகலைக் கொண்டுவந்தார் அக்னிஹோத்ரம். பெரியவா சொன்னது இதுதான்……….

“EVERY RELIGION ‘S DENOMINATIONS OR ANY RELIGION THERE OF ” என்ற வாக்குதான். படேல் ரொம்ப ஆச்சர்யப்பட்டார். “ஒரு பெரிய சட்ட நிபுணரால் மட்டுமே இந்த மாற்றங்களைப் பண்ண முடியும். ஒரு மடாதிபதி இவ்வளவு விவரம் தெரிந்தவரா!”

பெரியவா சாக்ஷாத் சட்டநாதன் இல்லையா? இன்றும் Indian Constitution article 26 எடுத்துப் பார்த்தால், இந்த வார்த்தைகள் “ஆம். தெய்வத்தின் குரல்” அதில் இடம் பெற்றுள்ளது!

————————————————————–
HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
Best regards……natarajan