அதிரூபன் தோன்றினானே …
++++++++++++++++++++++++++++
அதி ரூபனாகத் தோன்றி அருளும்
அத்தி வரதன் சொல்லும் செய்தி
என்ன தெரியுமா ?
இந்த மண்ணில் நான் வாசம் செய்யும் சமயம்
நான் முடிக்க வேண்டிய பணியோ ஏராளம் !
உடன் முடிக்க வேண்டும் அந்த அருட்பணி
அத்தனையும் மீண்டும் என் ஜல வாசம்
தொடங்கும் முன்!
என் மண்ணின் வாசம் எத்தனை நாள்
தெரியும் எனக்கு ! இந்த மண்ணில்
உன் வாழ்க்கை எத்தனை நாள் இன்னும் ?
தெரியுமா உனக்கு மனிதனே ?
புரிந்து நடந்து கொள் மனிதா நீ !
அத்தி வரதன் எனக்கே இந்த மண்ணில்
வாழ்வு ஒரு சில நாட்களே என்றால்
என்னைப் பார்க்கத் துடிக்கும் உனக்கு
நீ காணும் ஓவொரு காலையும் உனக்கு
மறு பிறவியே !
நாளை நாளை என்று நாளைக் கடத்தாமல்
இன்றே இப்போதே உன் கடமையை
செய்து முடித்துவிடு மனிதா நீ !
நிரந்தரம் என்று எதுவும் இல்லை எனக்கும்
உனக்கும் !
K .நடராஜன்
24/07/2019