“யாசகம்” … ‘வாசகர் கவிதை’ கேட்பது நம்ம கவிதை மணி
தினமணி …
யோசித்து யோசித்து பார்த்தேன் … வாசகர் ரசித்து வாசிக்க
ஒரு கவிதை கிடைக்குமா என்று…ஒரு சிறு பொறி தட்டியது !
மறு நிமிடம் என்னில் பிறந்தது இந்த கவிதை !
பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக யாசிப்பது இல்லை
அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !
வளரும் குழந்தை தன் தந்தையிடமும் எதுவும் யாசிப்பது இல்லை !
எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன் குழந்தைக்கு
தருவது பாசமும் நேசமும் …! ஒரு நல்ல
ஆசானும் தந்தையே அந்த குழந்தைக்கு !
யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த ” குழந்தை “யிடம்
இன்று யாசிப்பது யார் ?
வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த “குழந்தையின்”
பாசமிகு தந்தை… இப்போ அந்த முதியவர் தன் ” குழந்தையின்”
பாசத்தையும் , நேசத்தையும் யாசிக்கிறார் …அவருக்கு இப்போ
அதுதானே தேவை ….
பணம், காசு வேண்டி தன் கையேந்தவில்லை அந்த பெரியவர் …
உங்க அன்பையும் , அரவணைப்பையும் அள்ளி அள்ளி கொடுங்க !
SOURCE ….” யாசகம்” என்னும் தலைப்பில் தினமணி… கவிதைமணி வாசகர் கவிதை பகுதியில் வெளியான என் கவிதை
நடராஜன்