பேச்சில் நிதானம் தேவை …பெரியவா சொன்னது …

* கஷ்டங்களைச் சொல்வதாக இருந்தால் கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். கண்ட இடங்களிலும் கண்ணில் பட்ட மனிதர்களிடம் எல்லாம் நம் துன்பங்களைச் சொல்வதால் எப்பயனும் இல்லை. கடவுளால் மட்டுமே நம்முடைய கஷ்டங்களை பொறுமையுடன் கேட்டு அதற்கு தீர்வு தரமுடியும்.
* பாவங்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்றால் புண்ணியத்தால் தான் தீர்த்துக் கொள்ள முடியும். போன பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறவியிலாவது தீர்க்கட்டும் என்ற கருணையினால் தான் இறைவன் நமக்கு பிறப்பினைத் தந்திருக்கிறார்.
* மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனதை அடக்கி விட வேண்டும். மனம் அடங்கக் கற்றுக் கொண்டால் மரணநிலையில் இருப்பது போல், ஒரு சக்தியுமின்றி ஜடம் போல் ஆகிவிடுவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, மனம் அடங்கும் போது, சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை உருவாகும்.
* பேசும்போது “வளவள’ என்று மிகையாகப் பேசாமல் நிதானமாக அளந்து பேச வேண்டும். திருவள்ளுவரும் எதைக் காக்காவிட்டாலும் நாக்கைக் கட்டுப்படுத்திப் பழகவேண்டும் என்று சொல்லியிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

source::::::DinaMalar ..Tamil daily
Natarajan

Leave a comment