வாக்கு சாதுர்ய வாலி !!!!

1.வாக்குச் சாதுர்ய வாலி

வாலியிடம் ஒரு சந்திப்பில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி கேட்டார்.
நீங்க ஏன் வாலின்னு பேர் வச்சிகிட்டு இருக்கீங்க ?
வாலி சொன்னார் – ராமாயண வாலி யை யாரும் வெல்ல முடியாததற்குக் காரணம் அவன் எதிரில் யார் வந்து நின்றாலும்எதிராளியின் பலத்தில் பாதி வாலி க்கு வந்துவிடும். அதுமாதிரி நான் யாரை சந்திச்சாலும் எதிராளியின் அறிவில் பாதி எனக்கு வந்துடும்.

நா. பா அவரை கிண்டலடித்தார் – உங்களைப் பார்த்தா அவ்வள ஒண்ணும் அறிவாளியா தெரியலையே..!

வாலி சொன்னார் : நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கலையோ என்னவோ !!

2. வார்த்தை விளையாட்டு வாலி

இங்கிலீஷ், இந்தி தமிழ் எல்லாம் கலந்து கட்டி அடிக்கும் கவிஞர் வாலியின் வார்த்தை விளையாட்டுக்கு ஒரு உதாரணம். வி எஸ் ராகவன் நடித்த டிவி படம் ஒன்றில் அவரின் ஒரு வசனம் — பப்ளிக் பிராசிக்யூட்டர் ( நீலு) குற்றம் சாட்டப்பட்டரை கேள்விகேட்டு வாதம் செய்கையில். குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவம் நடந்த அன்று நான் திருப்பதியில் இருந்தேன் யுவர் ஆனர் என்று சொல்லி திருப்பதியில் வாங்கிய லட்டு ஒன்றை சாட்சியாக நீதிபதியிடம் கொடுப்பார்..
நீலு லட்டை வாங்கி விண்டெடுத்து வாயில் போட்டு, நீதிபதியைப் பார்த்து
“மை லார்ட், திஸ் இஸ் பொய் லாட்

 

source:::::input from a friend of mine …

natarajan

Leave a comment