அழுத கண்ணீர் …
………………
.
தங்கத் தலைவர் மூவர் வங்கக் கடலோரம் துயில் கொண்டாரே !
அலை கடலோரம் அமைதியாய் உறங்கும் தங்கள்
தலைவருக்கு விடை கொடுக்க திரண்ட அன்பு மக்கள்
வடித்த கண்ணீர், கடலையும் கண்ணீர் கடல் ஆக்கியதோ ?
நெஞ்சை அடக்கும் துக்கத்துடன் தொண்டர் பலர் வடித்த
கண்ணீர், வர வைத்ததே கண்ணீரை பலர் கண்ணிலும் !
அழுத கண்ணீர் கண்டு தானும் அழுத மக்களில் நானும் ஒருவன் !
மாண்டவர் மீண்டு வருவதில்லையே என்று
மனம் பொங்கி தினம் தினம் கடல் வடிக்கும்
கண்ணீர்தானோ தரை தொட்டு செல்லும் கடல் அலைகள் ?
Natarajan in http://www.dinamani.com