வாரம் ஒரு கவிதை ….”கருப்பு “

கருப்பு
++++++
தாயின் கருவறையில் துயில் !
தெரியாது அப்போது உலகம்
கருப்பா இல்லை சிவப்பா என்று !
மண்ணில் பிறந்ததும் இந்த குழந்தை
கருப்பு இந்த குழந்தை சிகப்பு என்பார்
அதன் முகம் பார்த்து !
குழந்தைக்கு அப்போதும் தெரியாது தான்
கருப்பா சிகப்பா என்று !  மற்றவர்
குழந்தையை மட்டும் கருப்பு சிகப்பு என்று
அடையாளம் காட்டும் அவர் குழந்தை
மட்டும் கருப்பாய் பிறந்தாலும் கருப்பில்லை !
என் குழந்தை மா நிறம் என்பார் !
காக்கைக்கு தன் குஞ்சு மட்டுமே
பொன் குஞ்சு!
K.Natarajan   in http://www.dinamani.com  dated  1st August 2019