வாரம் ஒரு கவிதை ….” வர்ண ஜாலம் ” 2

வர்ணஜாலம்
++++++++++++++
வானவில் காட்டும் விண்ணில் வர்ணஜாலம் !
நாட்டிய மேடையில் வர்ணம் படைக்கும் அந்த
நாட்டியமேடைக்கே  ஒரு வர்ணஜாலம் !
ஒரு கலைஞனின் கையில் தூரிகை
இருந்தால் அது படைக்கும் திரையில்
வண்ண ஜாலம் !
இசைக்கலைஞரின் இசை கேட்டு மெய்
மறந்து இசையை அசை போடும் அவர்
ரசிகர் கூட்டம் …அது இசையின் தனி
ஒரு மந்திர ஜாலம் …இசையின் வர்ணஜாலம் !
இது எதுவுமே இல்லாமல் வெறும்  வாய்ப்
பந்தல் மட்டுமே போடும் ஒரு கூட்டம் !
இதை செய்வேன் அதை செய்வேன்
திரிப்பேன் மணலைக் கயிறாக நான்
என்பார் சிலர் !…வெறும்  வார்த்தை ஜாலம் !
வார்த்தை ஜாலத்தை  வர்ண ஜாலமாக
நம்பி வாக்கும் அளிப்பார் வாக்காளர்
வாய் சொல் வீரருக்கு !
நம்பி வாக்களித்த வாக்காளர் கண் முன்னால்
திரும்பி வரவே மாட்டார் அந்த வேட்பாளர்!
அது அவர் செய்யும் மாயா ஜாலம் !
கந்தசாமி  நடராஜன்
07/08/2019

வாரம் ஒரு கவிதை …” வர்ணஜாலம் ” 1

வர்ணஜாலம்
+++++++++++++
விண்ணில் ஒரு வண்ணக்கோலம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
வானவில் ! அது ஒரு வர்ணஜாலம் !
என் வீட்டு வாசலில் ஒரு மாக்கோலம்
வெள்ளை மாக்கோலம் செம்மண் கட்டி !
அதுவும் ஒரு வர்ண ஜாலம் !
கோலம் போடுவது எப்படி? …தேடுகிறார்
சிலர் ” கூகிளில் ”  !
அது இந்த காலத்தின் கோலம் !
கோலம் போடும் கலை  சிலருக்கு
இன்னும் ஒரு மாயாஜாலம் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  07/08/2019
07/08/2019