” குறை ஒன்றும் இல்லை எனக்கு ” !!!!…..மகாபெரியவர் !!!!

காஞ்சி மஹான் சதாராவில் முகாமிட்டிருந்த சமயம்.

கோடீஸ்வரரும் தொழிலதிபருமான பிர்லா அவரைத் தரிசிக்க வந்தார். பம்பாயில் பாரதீய வித்யா பவனைக் கட்டிக் காத்து வந்து பக்திமான் அவர்! அவர் வந்திருக்கிறார் என்பதால் மஹான் தங்கியிருந்த இடத்தில் எந்த விதமான பரபரப்பும் ஏற்படவில்லை. சாதாரண பக்தர்களுக்கு எப்படி தரிசனம் கிடைத்ததோ, அதைப் போலவே திரு ஜி.டி. பிர்லாவும் ஜன்னலுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மஹானைத் தரிசித்தார்!

எப்போதுமே பிர்லா எந்தக் கோயிலுக்கோ அல்லது புண்ணிய க்ஷேத்திரங்களுக்க& #3019; போனால் நிறைய நன்கொடை தருவது வழக்கம். வெளியே போகும்போது செக் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வார். மஹான் ஏதாவது நன்கொடை கேட்பார் என்று அவர் நினைத்து விட்டார்.

அவர் அங்கிருந்து நகரும் வரை மஹான் வாயைத் திறக்கவில்லை.

பொறுக்க முடியாமல் பிர்லாவே கேட்டுவிட்டார்.

”நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?”

இதற்கு மஹான் சொன்ன பதில் பிர்லாவை பிரமிக்க வைத்துவிட்டது.

”நீ இப்போ செய்யற தொண்டையே விடாமல் செஞ்சுண்டிருந்தா போதும். நீயும் உன் குடும்பமும் க்ஷேமமாய் இருப்பீர்கள்!” என்று முடித்துவிட்டார்!

அத்துடன் பிர்லாவை சகல மரியாதைகளுடன் அனுப்பி வைக்கும்படி மடத்து சிப்பந்திகளுக்கு உத்தரவிட்டார்.

பக்தனின் திரட்டுப்பாலை ஏற்றுக்கொண்ட மஹான், கோடீஸ்வரரிடம் தான் கேட்க ஏதுமில்லை என்று சொல்லிவிட்டார் மாமுனிவர்!

source::::www.periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/index.cgi?board=exptamil&action=display&thread=3769#ixzz2MRWVEtif

Leave a comment