” வருக வருக ஜய ஆண்டே … ”

வருக வருக ஜய ஆண்டு

சித்திரைக் கோடையில்
சூடான காற்றும்
மர நிழலில்
ஒய்வு கொள்ளும்!

மரநிழலும்
மரத்தடியில்
வெய்யிலைக் கண்டு
வெளிறிப் போகும்!

வெய்யிலில்
வேப்ப மரங்கள்
வியர்வைத்துளியாய்
பூக்களைச் சிந்தும்!

பூக்களாம் மகிழ்ச்சியை
நம் நெஞ்சில் பரப்பி
ஜயப் புத்தாண்டு
ஜயமே கொடுக்கும்!

 

source:::: A.V. Ramanathan  on 14..04 2014

natarajan

ஜயப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Leave a comment